நடிகர் பார்த்திபன் தெலுங்கில் நடித்த உஸ்தாத் பகத் சிங் படம் நாளை மார்ச் 19ஆம் தேதி வெளியாகிறது.
இந்த படத்தில் பவன் கல்யாண், ஸ்ரீலீலா, ராஷி கண்ணா என பலர் நடிக்க பார்த்திபன் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என கூறப்படுகிறது.
இந்த படத்தல் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்த்திபன், தனது சாதியை வெளிப்படையாக கூறி வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முக்கியமாக பார்த்திபன் பேசும்போது, நான் நாயுடு பையன், நான் சென்னையில் வளர்ந்ததால் தெலுங்கு தெரியாது, ஆனால் இந்த படத்தின் வெற்றி விழாவுக்கு வரும் நிச்சயம் தெலுங்கில் சரளமாக பேசுவேன் என இந்த மூர்த்தி வாக்களிக்கிறான், மூர்த்தி என்னுடைய இயற்பெயர் என கூறினார்.
இந்த நிலையில் பார்த்திபன் சாதி பெயரை வெளிப்படையாக பேசியது, சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில பதிவிட்டுள்ள பார்த்திபன், சத்தியமாக சொல்கிறேன் எந்த உள் நோக்கமும் இல்லாமல் எந்த லாப நோக்கும் இல்லாமல் வாய்ப்புக்காகவோ வசதிக்காகவோ அந்த இரண்டு வார்த்தைகளை நான் பயன்படுத்தவில்லை.
அங்கே பேசினால் இங்கே தெரிய வாய்ப்பில்லை என்று நினைத்தா நான் பேசியிருப்பேன்? ஏதோ வாய்த்தவறி அதைக்கூட ஒரு கிண்டல் பாணியில் சொன்னேனேத் தவிர, இத்தனை வருட அனுபவத்தில் இதுவே முதன் முறை நான் ஜாதிப் பெயரைக் குறிப்பிட்டுச் சொல்வது. அப்படி ஜாதியை தலைமேல் வைத்துக கொண்டாடுகவர்களை எனக்கே பிடிக்காது

‘இவன்’ உட்பட பல படங்களில்/இடங்களில் நானே அதை வன்மையாக கண்டித்துள்ளேன். அப்படியிருக்க நானே அதைச் செய்வேனா? தவறு நடந்து விட்டது என்பதை முழுமையாக உணர்ந்து வருந்தி கிடக்கிறேன்.
இவ்வளவு பேர் வருத்தத்திற்கு நான் ஆளாகி இருப்பது எனக்கே பிடிக்கவில்லை. என் திறமையை மட்டுமே ந்ம்புவேனேத் தவிர, தவறியும் ஜாதியை சொல்லி வயிறு வளர்க்க எனக்கு விரும்புவனல்ல. இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என
உறுதியளிக்கிறேன்.

என் பேச்சால் வேதனைப் பட்டவர்கள் அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமாக் மன்னிப்பை தெரிவிக்கிறேன். தயவுசெய்து மறந்து விட்டு பழையபடி என்னை ஊக்கப்படுத்துங்கள்.
உங்களை விடவும் நானே அதிக வருத்தத்தில் உள்ளேன். இனி மிக் மிக் ஜாக்கிரதையாக நீங்கள் என் மீது வைத்திருக்கும் அன்பை பாதுகாப்பேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

