கஞ்சா போதையில் கண்ணில் கண்ட பெண்களை எல்லாம் விரட்டி தாக்கிய இளைஞர்கள் சம்பவத்திற்கு திமுக அரசே காரணம் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திருத்தணி அருகே கஞ்சா போதைக் கும்பல் இளைஞர்கள் கண்ணில் கண்ட பெண்களை விரட்டித் தாக்கி அவர்களிடம் அத்துமீறியதாகக் கூறப்படும் காணொளி சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது. அந்த மதிகெட்ட இளைஞர்கள் கர்ப்பிணிப் பெண் என்று கூட பாராமல் அத்துமீறி இருப்பது விடியா திமுக ஆட்சி போதைப் பொருட்கள் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்து தமிழக இளைஞர்களை எந்த அளவிற்கு சீரழித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.
தமிழகத்தின் அப்பா என்று கூறிக் கொள்ளும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் முதியோர், பெண்கள், மாணவிகளிடம் போதையில் வீரத்தைக் காட்டும் அளவிற்கு தமிழக இளைஞர்களை மாற்றி இருப்பது இந்த தீய ஆட்சியின் சாபக்கேடு..!

இளைஞர் சக்தியை மீட்க, போதைக் கலாச்சாரத்திலிருந்து தமிழக இளைஞர்களை மாற்ற பொன்னான நாளான ஏப்ரல் 23-ல் தமிழகத்தில் விடியா திமுக ஆட்சியை துடைத்தெறிவோம்..! இவ்வாறு அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

