தமிழ் சினிமாவில் உச்ச நடிகராகவும் இயக்குனராகவும் வளம் வருபவர் ஆர் பார்த்திபன். இவர் சமீபத்தில், நடிகை திரிஷாவை குறித்து பேசியது சமூக வலைதளங்களில் பெரிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. விஜயுடன் வந்தால் சர்ச்சை ஆன நிலையில், குந்தவையை வீட்டிலேயே குந்தவையுங்கள் என பார்த்திபன் அந்த வீடியோவில் பேசியிருந்ததற்கு த்ரிஷா பதிலடி கொடுத்திருந்தார்.

இந்நிலையில், Ustaad Bhagat Singh என்ற தெலுங்கு படத்தில் பார்த்திபன் நடித்திருக்கிறார். அந்த படத்தின், பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மேடையில் பேசும் பொழுது பார்த்திபன் தனது ஜாதி பெயரை கூறி தெலுங்கில் பேசுகிறார்.
Naidu in AP
— Dravid Kumar (@CPVUshaPL) March 16, 2026
Tamilan here for cinema#Nadiganda
pic.twitter.com/RDnEPgIl5x
அதில், நான் ராதாகிருஷ்ணன் பார்த்திபன் சென்னையில் பிறந்து வளர்ந்ததால் நான் தமிழ் நன்றாக பேச கற்றுக் கொண்டேன். தெலுங்கு எனக்கு சரியாக தெரியாது. இந்த படத்தின் வெற்றி விழாவில், பேசும்பொழுது நான் முழுமையாக தெலுங்கில் பேசுவேன் என பார்த்திபன் அந்த வீடியோவில் தெரிவித்து இருக்கிறார். தன் ஜாதி பெயரை குறிப்பிட்டு பார்த்திபன் இவ்வாறு பேசியதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
சாதில என்ன பெருமை வேண்டி கிடக்கு? @rparthiepan https://t.co/aMTFK7sfqQ
— முனைவர். கணேசு ガネス (@DrGanesh_Japan) March 16, 2026

