செயற்கை நுண்ணறிவு காலத்தில் சமுதாய வானொலி: ஊட்டியில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்குசெயற்கை நுண்ணறிவு (AI) ஊடகத் துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்தி வரும் நிலையில், “செயற்கை நுண்ணறிவு காலத்தில் சமுதாய வானொலி” என்ற தலைப்பிலான இரண்டு நாள் கருத்தரங்கு மார்ச் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் ஊட்டியில் நடைபெற்றது.
Table of Contents
கருத்தரங்கின் முக்கிய அம்சங்கள்

புதிய தொழில்நுட்பம்
சமுதாய வானொலி ஒலிபரப்பில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் ஏற்படுத்தும் மாற்றங்கள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டது.
வழிகாட்டுதல்
புதிய வானொலி நிலையங்களைத் தொடங்க விரும்பும் கல்வி நிறுவனங்கள், சமூக அமைப்புகள் மற்றும் NGO-களுக்குத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
நூல் வெளியீடு
சென்னைப் பல்கலைக்கழக இதழியல் துறை பேராசிரியர் முனைவர் தங்க. ஜெய்சக்திவேல் எழுதிய “சமுதாய வானொலிக் கையேடு” என்ற நூல் வெளியிடப்பட்டது.
அரசு மானியம்
சமுதாய வானொலி அமைப்பதற்காக மத்திய அரசு ரூ.12.5 லட்சம் வரை மானியம் வழங்கி வருவதாகவும், அதனைப் பெறும் நடைமுறைகள் குறித்தும் விளக்கப்பட்டது.

குறுகிய கால அனுமதி
இங்கிலாந்து நாட்டைப் போல இந்தியாவிலும் “பொங்கல் எஃப்.எம்”, “ரமலான் எஃப்.எம்” போன்ற குறுகிய கால சிறப்பு வானொலிகளை இயக்க அனுமதி வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து வலியுறுத்தப்பட்டது.
தொழில்நுட்பம் மற்றும் அனுபவப் பகிர்வு
ஏர் மீடியா புராட்காஸ்ட் சொல்லியூசன்ஸ் நிறுவனம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி 24 மணி நேர தானியங்கி ஒலிபரப்பு அமைப்பை உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டது.
ரத்தினம் மற்றும் கலசலிங்கம் பல்கலைக்கழக வானொலி நிலையப் பொறுப்பாளர்கள் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர். இரண்டாம் நாள் அமர்வில், வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள சர்வதேச ஊடக கருத்தரங்கிற்கான முன்னேற்பாடுகள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது.

