ஏப்ரல் 23-ஆம் தேதி தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு கட்சிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், விஜயின் தனிப்பட்ட வாழ்க்கையும் அதேபோல், தவெகவும் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி கொண்டு இருக்கிறார்கள்.

இதில், தனிப்பட்ட வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் ஒரே நேரத்தில் சமூக வலைதளங்களில் விமர்சனத்திற்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. முன்னதாக, கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக அவ்வளவுதான் என்று விமர்சனம் வந்த போதும் மீண்டும் களத்திற்கு வந்த விஜய் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருந்த நேரத்தில் தான் இணையமே பற்றி எரியும் வகையில் விஜயின் மனைவி சங்கீதாவின் விவாகரத்து அறிவிப்பு மனு இணையதளத்தில் கசிந்தது.

அதில், என் கணவர் விஜய் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும், அந்த நடிகையுடன் உறவை முறித்துக் கொள்ளும்படி சொல்லியும் அவர் கேட்கவில்லை என்றும், இதனால் தான் விவாகரத்து கோரி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார். இந்த செய்தி பரபரப்பாக பேசப்பட்டு வந்த நேரத்தில் விஜய், திரிஷா இருவரும் ஒரே காரில் ஒரே நிற உடையில் ஜோடியாக தயாரிப்பாளரின் இல்ல திருமணத்திற்கு கலந்து கொண்டு சமூக வலைதளங்களில் பேசு பொருளானது.

பல ஆண்டுகளாக இருவரும் நல்ல நண்பர்கள் எனக் கூறப்பட்டாலும், இந்த நிகழ்வு மீண்டும் இவர்களின் நட்பை கேள்விக்குறியாக்கி சர்ச்சையாகியது என்றே சொல்லலாம். இந்த நிலையில், தேர்தல் ஆணையம் தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படும் என்றும், மே நான்காம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்படும் என்றும் அறிவித்திருந்தது. இந்த செய்தி, இணையத்தில் வெளியானதுமே தவெக தொண்டர்களும் விஜய் ரசிகர்களும் கவலையில் ஆழ்ந்தனர்.

அதற்கு காரணம் என்னவென்றால், விஜய் சங்கீதா விவகாரத்து வழக்கு ஏப்ரல் இருபதாம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. வாக்குப்பதிவுக்கு மூன்று நாளைக்கு முன்பே இந்த வழக்கு நீதிமன்றத்தில் வர இருக்கிறது. இப்படி இக்கட்டான சூழ்நிலையில், விஜய்க்கு டபுள் டென்ஷன் என ரசிகர்களும் புலம்பி வருகிறார்கள். இது மட்டும் இல்லாமல் மே நாலாம் தேதி அதாவது வாக்கு எண்ணிக்கை நாளில் இன்னொரு ‘கோஇன்சிடென்ட்’ அதாவது, நடிகை திரிஷாவின் பிறந்த நாளாகும்.

ஏப்ரல் 20-ம் தேதி விவாகரத்து வழக்கு விசாரணை ஏப்ரல் 23ஆம் தேதி வாக்குப்பதிவு. மே நாலாம் தேதி தேர்தல் முடிவு மற்றும் திரிஷாவின் பிறந்த நாள் என அடுத்தடுத்த மாதத்தில் பல சம்பவங்கள் நடக்க இருக்கிறது. இவை அனைத்தையும், விஜய் தாக்குப் பிடிப்பாரா என ரசிகர்களும் இப்போதே புலம்ப ஆரம்பித்து விட்டனர்.

