சமீபத்தில் தவெக கழகத்தை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா நடிகர் ரஜினியை திமுக மிரட்டி அரசியலுக்கு வரவிடாமல் செய்தது. ஆனால், விஜய்க்கு மன வலிமை உள்ளது. அதனால், தான் அரசியலுக்கு வந்துள்ளார் என்று விமர்சித்திருந்தனர். இது ரஜினி ரசிகர்கள் மத்தியில் பெரும் கோபத்தையும், கொந்தளிப்பையும் உருவாக்கியுள்ளது.

இவரது இந்த கருத்துக்கு ரஜினி ரசிகர்கள் காட்டமாக பதிலடி கொடுத்து வருகிறார்கள். அதே நேரத்தில், ரஜினி ரசிகர்களின் விமர்சனத்திற்கு பல விஜய் ரசிகர்கள் இணையதளத்தில் குறிப்பாக சமூக வலைதளங்களில் மிகவும் மோசமான கமெண்ட்களை தொடர்ந்து பதிவிட்டும் ரஜினி ஏன் அரசியலுக்கு வரவில்லை என்றும், கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தமிழ்நாடு அரசியல் களம் 100 ஆண்டுகளாகவே திரைத்துறையுடன் தொடர்பு கொண்டதாகவே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விஷயமே. திராவிட கருத்துக்களை மக்கள் மத்தியில் பாடல்களாக, நாடகங்களாக, சினிமங்களாக தொடர்ந்து பரப்பப்பட்டே வருகிறது. இப்படி இருக்கையில், தமிழ்நாடு அரசியல் களமும் தமிழ் திரைப்பட துறையும் இணைந்து உள்ளது என்று சொல்லலாம்.

அந்த வகையில், ரஜினியின் தாக்கம் தமிழ்நாடு அரசியலில் தொடர்ந்து கொண்டே தான் இருந்து வருகிறது. ரஜினி ரசிகர்கள் அவரது பழைய வீடியோக்களை இப்போது அதிகம் பகிர்ந்து வருகிறார்கள். அதாவது, ரஜினி இன்னும் அரசியலுக்கே வரலை அவர் வந்த பின்னர் யாருக்கு சவாலாக இருப்பார் என்பதை பார்த்துக் கொள்ளலாம்.

கடல் ஆழத்தை கண்டவனால் கூட ரஜினியின் ஆழத்தை காண முடியாது. திமுகவிற்கு அவர் என்றும் எதிரி கிடையாது. இது மட்டுமல்லாமல் அவர் இன்னும் அரசியலுக்கே வரவில்லையே என்றும் அப்போது தெரிவித்துள்ளார். துரைமுருகன் கூறியதை போலவே ரஜினி அரசியலுக்கு வரவில்லை. மேலும், தொடர்ந்து திமுகவுடன் நெருக்கமாகவே இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செத்தாலும் சாவேனே தவிர கோழையா மட்டும் சாக மாட்டேன் ~ தலைவர் ரஜினிகாந்த். 💯👌🏻
— PSK (@shagul_psk) March 15, 2026
சூரியனை பார்த்து நாய்கள் குரைத்த கதை தான் நம்ம தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனாவை பார்த்தால் நியாபகம் வருகிறது.😄
The lion never proves himself; his roar is enough.💥🤘🏻@rajinikanth #ThalaivarForLife pic.twitter.com/z0vccxWEnQ

