சினிமாவில் ஒரு சில நடிகைகள் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலம் கச்சிதமாக நடித்து பின்னிபெடலெடுப்பர். அந்த வரிசையில் நடிகை ராதிகாவுக்கு தனியிடம் உண்டு.
நடிகை ராதிகா, எம்ஆர் ராதா மகள் என்றாலும், நடிப்பில் அப்பனையே மிஞ்சும் அளவுக்கு நடிப்பார். மருத்துவராக, வக்கீலாக, காதல் தேவதையாக பல படங்களில் நடித்த அவருடைய சினிமா கேரக்டர்களில் ஜீன்ஸ் படத்துக்கு என தனியிடம் உண்டு.

படத்தில் குறைவான நேரத்தில் வந்தாலும் அழுத்தமான கேரக்டர். பிரசாந்த் ஐஸ்வர்யா ராயை சேர்த்து வைக்கும் கேரக்டர். நடிப்பில் அசத்தியிருப்பார். இப்படி தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த அவர், சமீப காலமாக ஹீரோக்களுக்கு அம்மா வேடத்தில் பின்னி எடுத்து வருகிறார்.
தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில், உருவாகியுள்ள தாய் கிழவி படத்தில் ராதிகா, பவுனுத்தாயி கதாபாத்திரத்தில் மிரட்டியுள்ளார். முக்கியமாக வயதான தோற்றத்திற்காக அவர் மெனக்கெட்டு இருப்பதை ப்ரோமோவை பார்த்தாலே சொல்லிவிடலாம். மிரட்டும் தொனி, வட்டார பேச்சு என திமிர்த்தனமாக தாய் கிழவி நடந்து வருவதை பார்த்தாவே ஆச்சரியமூட்டுகிறது.

சிவகார்த்தகேயன் தயாரிக்க, சிவக்குமார் முருகேசன் இந்த படத்தை தயாரித்துள்ளார். நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார். வரும் பிப்ரவரி 20ஆம் தேதி இந்த படம் வெளியானது. முன்னதாக, குறைந்த பட்ஜெட்டில் உருவான தாய் கிழவி திரைப்படம் இதுவரை 50 கோடி வசூலை உலக அளவில் இந்த படம் கடந்துள்ளது என சிவகார்த்திகேயன் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.
இந்நிலையில், படம் மக்களிடம் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகி இருக்கிறது என்பதை மறுக்க முடியாது. அந்த வகையில், தற்போது வரை ரூபாய் 62 கோடி வரை வசூல் பேட்டை நடத்தி தமிழகத்தில் மட்டும் 46 கோடி ரூபாய் தாய்க்கிழவி திரைப்படம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

