நடிகர் ரவி மோகன் ஆர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பாடகி கெனிஷாவுடன், ரவி மோகன் கிசுகிசுக்கப்பட்டார். அவரும் அந்த பாடகியும் பொதுநிகழ்ச்சிகளில் பங்கேற்றனர். இதையடுத்து ஆர்த்தி, ரவி மோகன் குறித்து பல விஷயங்களை பகிர்ந்தது பேசுபொருளானது.

இதையடுத்து ரவி மோகனும், திருமணத்துக்கு பின் தனக்கு நேர்ந்தது குறித்து விளாவரியாக கூறினார். விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், ரவி மோகன் தனியாக பாடகி கெனிஷாவுடன் தங்கி வருகிறார். இது குறித்து இருவர் மீதும் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. விரைவில் சட்டப்படி விவாகரத்து கிடைத்துவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த தம்பதிகளுக்கு விவாகரத்து அறிவிப்பு வெளியானதில் இருந்து குடும்ப பிரச்சினையை மாறி மாறி அறிக்கை வெளியிட்டு பொது பிரச்சினையாகவே இருவரும் மாற்றிவிட்டார்கள். தற்போது, இது குறித்து அறியாதவர்களே இருக்க முடியாது என்று சொல்லலாம்.
இப்பிரிவிற்கு பிறகு கெனிஷாவுடன் ரவிமோகன் மிகவும் அதிகமாக நெருக்கம் காட்டி வரும் நிலையில், ஆர்த்தியோ இன்னும் சிங்கிளாகவே தனது மகன்களுக்கு சிறந்த தாயாக இருந்து வருகிறார். இந்நிலையில், ட்ரெண்டிங் ஆக உடையில் செம லுக்கில் ஆர்த்தி ரவி தற்போது வெளியிட்டுள்ள அசத்தல் புகைப்படங்கள் இணையதளத்தில் அசுர வேகத்தில் லைக்குகளை குவித்து வருகின்றன.

அதில், அவர் குறிப்பிட்டுள்ள பதிவில் நாம் பார்க்கும் விதம் எல்லோரும் இறுதியில் அவர்கள் செய்யும் தேர்வுகளுக்கு பொறுப்பாவார்கள். மற்றவர்களின் வார்த்தைகள் செயல்கள் எண்ணங்கள் மற்றும் நடத்தை ஒருபோதும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. நாம் கட்டுப்படுத்துவது என்னவென்றால், நாம் நம்மை எப்படி நடத்துகிறோம் என்பதுதான்.

நமது மதிப்புகள் நமது முடிவுகள் மாற்றும். நாம் எவ்வாறு பதிலளிக்கிறோம். அந்த எல்லையை புரிந்து கொள்வது தெளிவை கொண்டு வருகிறது என குறிப்பிட்டு ஒரு நீண்ட பதிவை வெளியிட்டு இருக்கிறார். இவரது பதிவானது கடினமான சூழ்நிலைகளில் நிதானமாக இருக்க வேண்டியதின் அவசியத்தை சிறப்பாக வெளிப்படுத்துவதாக இருக்கிறது. இதுகுறித்து, ரசிகர்கள் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர். மேலும், ஒரு சிலரோ இது யாருக்காக என்பது போல் கேள்வி எழுப்பியும் வருகின்றனர்.

