TVK தலைவர் விஜயின் கடைசி படமான ஜனநாயகன் ஜனவரி மாதமே ரிலீஸ் ஆக வேண்டியது. ஆனால், சென்சார் சிக்கலால் நீதிமன்றத்திற்கு சென்றார் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர்.
நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு கிடைக்காமல் போனதை அடுத்து, அந்த வழக்கை வாபஸ் பெற்றார்கள். முன்னதாக சென்சார் போர்டு மீது சமீப காலமாக பல்வேறு புகார்கள் எழுத்து வருகிறது. குறிப்பாக, விஜயின் ஜனநாயகன் படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்தது பெரிய சிக்கல்களை ஏற்படுத்தியது. அந்த படத்தின், ரிலீஸ் இன்னும் கேள்விக்குறியாகவே இருந்து வருகிறது.

முன்னதாக, விஜயின் கடைசி படமாக வெளியாக இருக்கும் ஜனநாயகன்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக மாறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் ரிலீஸ் ஆவதிலேயே மிகப்பெரிய பிரச்சனையை தற்போது, சந்தித்து வருகிறது.

இதனால், ரசிகர்கள் இடையே முதலில் படம் ரிலீஸ் ஆகுமா? என்ற கேள்வி எழுந்து வருகிறது. இப்படத்தை நம்பி ரூபாய் 500 கோடி முதலீடு செய்துள்ளது கேவிஎன் நிறுவனம். இப்படத்திற்காக, யாருமே எதிர்பார்க்காத வண்ணம் மலேசியாவில் ஜனநாயகன் ஆடியோ வெளியீட்டு விழா நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

கடந்த ஜனவரி ஒன்பதாம் தேதி இப்படம் ரிலீஸ் ஆக வேண்டிய நிலையில், ஆனால் இன்னும் சென்சார் பிரச்சனையில் இருக்கிறது. நடிகர் விஜய் படங்கள் எப்போதுமே பாக்ஸ் ஆபிஸில் செம கலெக்ஷன் கொடுக்கும் அந்த நம்பிக்கையிலேயே பெரிய அளவில் வியாபாரமும் நடக்கும்.

ஆனால், ஜனநாயகன் அவரின் கடைசி படம் இப்படத்தில், வியாபாரம் எல்லாம் பெரிய அளவில் நடந்தது. ஆனால், கடைசியில் சென்சாரால் ரிலீஸ் ஆகாமலே தற்பொழுது கிடைப்பில் உள்ளது. ரிலீஸ் தேதி தள்ளி போய்க்கொண்டே இருக்க தற்போது, பணத்தை வாங்கிய அமேசான் நிறுவனம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளனர். அதாவது, ரூபாய் 120 கோடி கொடுத்து ஜனநாயகன் படத்தை வாங்க அவர்கள் போட்ட ஒப்பந்தத்தை தற்போது ரத்து செய்ய முடிவு செய்துவிட்டதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

