ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கர்நாடகாவை சேர்ந்த டிரெண்டிங் நடிகை ராஷ்மிகாவும் திருமணம் செய்து கொண்டனர். படத்தில் நடித்த போது ஏற்பட்ட காதல், திருமணம் வரை கைகூடியுள்ளது.

ராஷ்மிகா மந்தனாவின் அம்மா சுமார் எட்டு வருடங்களுக்கு முன்பு பேசிய ஒரு ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட வருகிறது. அதில் ராஷ்மிகா மற்றும் நடிகர் ரஷீத் செட்டியின் நிச்சயதார்த்தத்தின் போது ஏற்பட்ட சில சிக்கல்கள் குறித்து அவரது தாயார் பேசுவதாக கூறப்படுகிறது.

இதனை கண்ட ராஷ்மிகா வெளியிட்டுள்ள பதிவில் அந்த ஆடியோவை பகிர்பவர்கள் 24 மணி நேரத்திற்குள் அதை நீக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். மேலும் அவ்வாறு நீக்க தவறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுவரை இந்த அற்புதமான பயணத்தில் என்னுடன் இருந்த எனது அன்பிற்குரிய மக்களுக்கு இந்த விவகாரத்தில் தொடர்புடைய மற்றவர்களுக்கும் கடந்த எட்டு ஆண்டுகளாக ஒரு சில ஊடகங்கள் மற்றும் தனி நபர்களால் எனக்கு எதிராக திட்டமிட்ட தவறான பிரச்சாரங்கள், துன்புறுத்தல்கள் மற்றும் தாக்குதல்கள் நடத்தி வருகின்றன.

எனது பேச்சுக்கள் மாற்றப்படுவதையும் நான் சொல்லாததை தவறான கதைகளோடு ஜோடிக்கப்படுவதையும் நான் பார்த்துக் கொண்டிருக்க மாட்டேன். வெறும் வியூசுக்காக வெறுப்புணர்வு பரப்பப்படுகிறது. பொது வாழ்க்கையில், வரும் விமர்சனங்களை நான் ஏற்றுக் கொண்டேன். ஆனால், கடந்த 24 மணி நேரத்தில் நடந்த செயல்கள் அத்துமீறல்கள் இதை என்னால் புறக்கணிக்க முடியாது என்று அந்த பதிவில் பதிவு செய்துள்ளார்.
— Rashmika Mandanna (@iamRashmika) March 12, 2026

