தென்னிந்திய சினிமாவில் மிகவும் முக்கியமான அதே நேரத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் த்ரிஷா. இவர் கடந்த 24 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் ஜொலித்து வருகிறார். இவருக்கு என்று பெரும் ரசிகர்கள் பட்டாளமே இருக்கிறது. எப்போதுமே, இவரது போஸ்ட்க்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் கவனமும் கிடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய திருமண வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்றும், அதற்கான துணையானவனை அவர் இப்படித்தான் தேர்ந்தெடுப்பார் என்றும், த்ரிஷா பேட்டி ஒன்றில் விளக்கம் அளித்துள்ளார். முன்னதாக, 2016 ஆம் ஆண்டு திரிஷா ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில், நான் திருமணத்திற்கு முன்னர் எனக்கு கணவராக வரப்போகின்றவரிடம் இவர் தான் என்னுடையவர் அவருடன் தான் இந்த வாழ்க்கை வாழப் போகிறோம் என நான் உணர வேண்டும்.

ஏனென்றால், எனக்கு விவாகரத்து செய்வதில் துணியும் நம்பிக்கை இல்லை. திருமணத்திற்கு பின் நான் ஒருபோதும் விவாகரத்து செய்ய மாட்டேன். எனக்கு திருமணம் செய்வதற்கு முன்னர் நூறு முறை யோசித்துதான் நான் முடிவு எடுப்பேன்.
நான் வேறொருவரை காயப்படுத்தவோ அல்லது மகிழ்ச்சியற்ற வாழ்க்கை வாழவோ விரும்பவில்லை. என்னை சுற்றி இருக்கும் பலரும் தவறான காரணங்களுக்காக திருமணம் செய்திருப்பதை நான் வெளிப்படையாக பார்க்கிறேன்.

அதனால், அவர்கள் கொஞ்சம் சந்தோஷம் இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். எனக்கு, அப்படி ஒரு வாழ்க்கை வேண்டாம். திருமணம் இரண்டாவது விஷயம் தான். அதற்கு, முதலில் எனக்கு ஒருவரை பிடித்து இருந்தால், தான் நான் அவரை காதலிக்கவே தொடங்குவேன்.
பின்னர், தான் திருமணம் செய்து கொள்வேன். அப்படிப்பட்ட ஒரு துணையை நான் நிச்சயம் சந்திப்பேன். அதில், நான் 100% உறுதியாக இருக்கிறேன் என்று த்ரிஷா தனது திருமணம் குறித்தும் துணைவர் பற்றியும் பேசிய பேட்டி தற்போது, இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

