தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச்சம்பவங்கள் பெருகி வரும் நிலையில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், விடிந்தால் ஒரு பாலியல் வன்கொடுமை செய்தி வரும் விடியா திமுக ஆட்சியில், இன்று காலையிலேயே சென்னையில் மட்டும் 14 வயது பள்ளி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை, ப்ராஜெக்ட் தொடர்பாக சென்னை வந்த கல்லூரி மாணவிக்குப் பாலியல் வன்கொடுமை, தையல் கடையில் 19 வயது பெண்ணுக்குப் பாலியல் தொல்லை என மூன்று செய்திகள் வந்திருக்கின்றன.
இந்தப் பதிவை எழுதும் போதே தமிழகத்தின் எந்த மூலையில், எந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி வருகிறாரோ என யோசிக்கையில் ஈரக்குலை நடுங்குகிறது. தொடர்ந்து ஒரு வார காலமாக நடக்கும் கொடூரங்களே, கேடுகெட்ட திமுக ஆட்சியின் திறனற்ற நிர்வாகத்திற்கு சாட்சி!

எனவே, தமிழகத்தைப் பெண்கள் வாழத் தகுதியற்ற மாநிலமாக மாற்றிய திமுகவைத் துரத்தியடிப்போம்! தமிழக மகளிரைக் காப்போம்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

