அரிசி நீரில் அதிகப்படியான சத்துக்கள் இருக்கின்றன. கார் ஹைட்ரேட்டுகள், அமினோ அமிலங்கள், ஆன்டி ஆக்ஸிடென்ட்கள், தாதுக்கள், வைட்டமின் பி மற்றும் வைட்டமின் ஈ போன்ற ஏராளமான சத்துக்கள் அரிசி நீரில் நிறைந்து கிடக்கின்றன. அரிசி நீரை தலைமுடிக்கு ஷாம்பு பயன்படுத்திய பின் கொண்டு அலாசினால் முடிக்கும் வலிமையும் இயற்கையான பொழுவும் கிடைப்பதும், கூந்தல் பளபளப்பு துணையும் புரிகிறது.

அரிசி கழுவிய நீரில் அதிகப்படியான எண்ணெய் உற்பத்தியை கட்டுப்படுத்த உதவுகிறது. இது முகத்தில் எண்ணெய் வலியும் சரும கொண்ட நபர்கள் இதனை பயன்படுத்த நல்ல மாற்றத்தை காணலாம். உடல் வெப்பநிலையை சீராக்க நீங்கள் இதை பயன்படுத்தலாம். கோடை காலத்தில் உடலில் அதிக நீர் இழப்பு ஏற்படும்.

அப்போது, அரிசி தண்ணீரை உட்கொள்வது உடலை குளிர்விக்க ஒரு சிறந்த வழியாகும். பாகற்காய், சுண்டைக்காய் போன்ற கசப்பான சுவை கொண்ட காய்களை அரிசி கலைந்த நீரில் சில மணி நேரம் ஊற வைத்து பிறகு சமைத்தால் அவற்றின் கசப்பு தன்மை குறைந்து ருசியாக இருக்கும்.

கிழங்குகளை அரிசி நீரில் கழுவி வேகவைத்தல் சீக்கிரமே வெந்துவிடும். கருணைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, சேப்பங்கிழங்கு போன்றவற்றை இந்த நீரில் ஊற வைத்து சமைத்தால், அரிப்பு தன்மை நீங்கிவிடும். அரிசி கழுவிய நீரை வீணாக கிச்சன் சிங்கில் கொட்டாமல் அருகில் உள்ள செடிகளுக்கு அல்லது பசு மாடுகளுக்கு பருக தரலாம். தூய்மையான பருத்தி துணியை அரிசி நீரில் நனைத்து அதை முகத்தின் மீது சிறிது நேரம் மென்மையாக தேய்த்தால் சரும துளைகள் மறைந்து சருமம் பொலிவு பெறும்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

