சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பார்த்திபன் எதுகை முனையாக பேசுகிறேன் என்ற பெயரில் திரிஷா குறித்து பேசியது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது. அதற்கு, பலரும் பார்த்திபனுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இந்நிலையில், திரிஷா காட்டமான ரிப்ளே கொடுத்தார். இதனால், பார்த்திபன் தரப்பு விளக்கத்தை கொடுத்து மன்னிப்பு கேட்டார். ஆனாலும், நடிகை திரிஷா தனது எக்ஸ்தள பக்கத்தில் பார்த்திபன் பெயரை குறிப்பிடாமல் விளாசிவிட்டார். இது தொடர்பாக, தனது ஸ்டைலில் விளாசிவிட்ட பார்த்திபன் முதலில் தனது youtube சேனலில் பகிர்ந்த வீடியோவில், திரிஷா பெயரை குறிப்பிடாமலே பேசி வந்தார்.

அதன் தொடர்ச்சியாக, அவர் பாகிர்ந்த இரண்டாவது வீடியோவில், நடிகை திரிஷாவை பாராட்டியுள்ளார். அதாவது, ஐயா நல்லகண்ணு அவர்களின் மறைவின்போது அஞ்சலி செலுத்து சென்றேன். அப்போது, அவர் உடல் தானம் செய்துள்ளார் என்று கூறினார்கள்.
நான் அப்போது, சொன்னேன். நானும், எனது மனைவியும் கூட உடல் தானம் செய்துள்ளோம் என்றேன். வேறு யாரெல்லாம் உடல் தானம் செய்துள்ளார்கள் என்று விசாரித்த போது நடிகை திரிஷா உடல் தானம் செய்துள்ளதாக கூறினார்கள்.

எனக்கு அதைக் கேட்டு மகிழ்ச்சியாக இருந்தது. ஒரு திரைப்பட நட்சத்திரம் என்பதை மீறி உடல் தானம் செய்ய முன்வந்துள்ள த்ரிஷாவிற்கு எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துக்களும் என்று அந்த வீடியோவில் அவர் பேசியுள்ளார்.
மேலும், சமீபத்திய சர்ச்சை வீடியோ தொடர்பாக நான் பதிவிடும் கடைசி வீடியோ இது எனவும், இனிமேல் யாரும் இது குறித்து பேச வேண்டாம் எனவும் பார்த்திபன் அந்த வீடியோவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

