டெய்லி டிபனுக்கு இட்லி தோசை சாப்பிட்டு போர் அடிச்சு போச்சா, கவலையை விடுங்க. வித்தியாசமான காலை டிபனை செய்து சாப்பிடுங்க, அந்த வகையில் சேமியாவை வைத்து உப்புமா செய்யாமல் அடை செய்து சாப்பிடுங்க. இந்த அடை வழக்கமா சாப்பிடும் அடையை விட கொஞ்சம் வித்தியாசமா இருக்கும்.
விரும்பி விரும்பி சாப்பிடக் கூடிய வகையில் மொரு மொருன்னு இருக்கும். இந்த அடைக்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, காரச் சட்னி அற்புதமான சைடு டிஷ்ஷா இருக்கும். முக்கியமா இந்த அடை செய்வதற்கு அதிக டைம் எடுத்துக்காது. எப்படி செய்யலாம்னு இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- ஒரு கப் வறுத்த சேமியா
- தேவையான அளவு சுடு தண்ணீர்
- ஒரு கப் அரிசி மாவு
- கால் கப் ரவை
- சுவைக்கு ஏற்ப உப்பு
- அரை கப் துருவிய சுரைக்காய்
- ஒரு பொடியாக நறுக்கிய வெங்காயம்
- ஒரு துருவிய கேரட்
- ஒரு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
- சிறிய துண்டு துருவியை இஞ்சி
- ஒரு கொத்து பொடியாக நறுக்கிய கருவேப்பிலை
- ஒரு டீஸ்பூன் சீரகம்
- கால் டீஸ்பூன் பெருங்காயத்தூள்
- அரை டீஸ்பூன் மிளகுத்தூள்
- சிறிது தண்ணீர்
- தேவையான அளவு எண்ணெய்
- சிறிது கடுகு சிறிது
- வெள்ளை எள்
- தேவையான அளவு நெய்
செய்முறை
Step 1: முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்து வறுத்த சேமியாவை ஒரு பாத்திரத்தில் எடுத்து அதில் கொதிக்கும் நீரை ஊற்றி மூடி வைத்து 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும்.
Step 2: பின்னர் 15 நிமிடங்கள் கழித்து மூடியை திறந்து அதில் உள்ள அதிகப்படியான நீரை வடிகட்டி சேமியாவை குளிர வைக்க வேண்டும். பின்பு, ஒரு பாத்திரத்தில் வேகவைத்த சேமியாவை எடுத்து அதனுடன் அரிசி மாவு, ரவை மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்க்க வேண்டும்.
Step 3: அதன் பின்னர், அதில் துருவி வைத்துள்ள சுரைக்காய் மற்றும் கேரட்டை சேர்த்து அத்துடன் பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கருவேப்பிலை மற்றும் துருவிய இஞ்சி ஆகியவற்றை சேர்க்க வேண்டும்.
Step 4: பிறகு அதில் சீரகம் பெருங்காயத்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும். பின்னர், அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி நான்கு கலந்து மூடி வைத்து பத்து நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
Step 5: முக்கியமாக அதிக நீரை ஊற்ற வேண்டாம். அதைப்போல் மிகவும் கெட்டியாகவும் கலந்து கொள்ள வேண்டாம். மிதமான அளவில், கலந்து கொள்வது சிறந்தது.
Step 6: இறுதியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில், ஒரு டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிறிது கடுகு, வெள்ளை எள், கருவேப்பிலை சேர்த்து தாளித்து கலந்து வைத்துள்ள கலவையை ஒரு கரண்டி ஊற்றி பரப்பி மூடி வைத்து மிதமான தீயில் வைத்து இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வேக வைக்க வேண்டும்.
Step 7: பின்னர் மூடியை திறந்து சிறிது நெய்யை தடவி திருப்பி போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் வேகவைத்து எடுத்தால் சுவையான சேமியா அடை ரெடி.

