தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போது, பல்வேறு சிக்கல்கள் நிரம்பியுள்ளது என்று சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கினார்.
இந்த வருடம் வரும் தேர்தலில் இவரது கட்சி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என்று சொல்லும் அளவிற்கு தொண்டர்களும், ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விஜயின் வெற்றியை எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடியை இறக்கியது போல், மனைவி சங்கீதா எதிர்பாராத நிலையில், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார். முன்னதாக, நடிகர் விஜயின் குடும்ப வாழ்க்கை விவாகரத்து வதந்திகளால் சூழப்பட்டு உள்ளது. அனைவரும் அறிந்த விஷயம்.

இந்நிலையில், பிரபல இந்தி இயக்குனர் விக்ரம் பட் போட்டிருக்கும் பதிவில் விஜய் மற்றும் த்ரிஷாவிற்கு வாழவும் காதலிக்கும் உரிமை இருக்கிறது எனக் கூறியிருக்கிறார். மேலும், விஜய் மற்றும் திரிஷாவின் சொந்த வாழ்க்கை பற்றி அதிகம் பரபரப்பாக பேசப்படுகிறது. ஆன்லைனில் வரும் பதிவுகள் உண்மையா? இல்லையா? என எனக்கு தெரியவில்லை.

அது உண்மை என்றால், நான் சில விஷயங்களை சொல்ல விரும்புகிறேன். விஜய் மற்றும் த்ரிஷாவிடம் ஒரு நல்ல விஷயத்தை பார்க்கிறேன். ஒரு விஷயம் இல்லை என அவர்கள் மறைக்கவில்லை என்பது கண்ணியமான விஷயம். காதலை மறைக்காமல் இருப்பது கண்ணியமான விஷயம் தான். காதலிப்பது என்ன அவ்வளவு பெரிய பாவமா? அவர்களுக்கும் வாழவும் காதலிக்கவும், உரிமை இருக்கிறது என விக்ரம் பட் அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.

