திரைப்படங்கள் மற்றும் விளம்பரங்களில் நடித்து குழந்தை நட்சத்திரமாக அறியப்பட்டவர் சாரா அர்ஜுன். இவரின் தந்தை ராஜ் அர்ஜுன். இவர் ஒரு ஹிந்தி நடிகர். பல இந்தி மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும், இவர் இயக்குனர் ஏ.எல்.விஜய் அவர்களின் தாண்டவம் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

சாரா அர்ஜுனின் தாயார் சான்யா ஒரு நடன ஆசிரியர் மற்றும் அவருடைய பெற்றோர்கள் முதலில் போபாலில் வசித்து வந்தனர். பின்னர், இவரின் பெற்றோர் 2000 ஆம் ஆண்டு முதல் மும்பையில் குடி பெயர்ந்தனர். இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவான தெய்வத்திருமகள் படத்தின் மூலமாக சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானர்.

இதனை தொடர்ந்து, சைவம் படத்தில் நடித்த பின்னர், பொன்னியின் செல்வன் படத்தில் குட்டி நந்தினி ஆக நடித்திருந்தார். அப்போதே, தெய்வத்திருமகள் படத்தில் பார்த்த குட்டி பொண்ணா இது என பலரும் ஆச்சரியப்பட்டனர்.

இதைவிட ஒரு படி மேலாக கடந்த ஆண்டு வெளிவந்த துரந்தர் படத்தில் ரன்வீர் சிங்குக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாகவும் அறிமுகமானார். இவருடைய, வயது வித்தியாசம் துரந்தர் படத்தில் ஒரு பேசு பொருளானது, இந்தப்படம் மிகப்பெரிய வெற்றியை சாராவிற்கு பெற்று தந்தது என்று சொல்லலாம்.

முன்னதாக, வருகிற 19-ஆம் தேதி துரந்தர் இரண்டாம் பாகம் வெளிவர உள்ளது. இந்த நிலையில், நடிகை சாராவின் சமீபத்திய பேட்டி ஒன்றில், மேக்கப் குறித்து வெளிப்படையாக பேசியுள்ளளார். அதில், நான் பெரிய அளவில் மேக்கப் விரும்புவது கிடையாது.

இயற்கையான அளவை தான் விரும்புகிறேன். லேசான டச் அப் மட்டும் செய்து கொண்டு கிளம்பி விடுவேன். படப்பிடிப்பின் போது தேவைப்படும் பட்சத்தில் மேக்கப் போடுவேன். அதுவும், அளவாக தான் பயன்படுத்துவேன். மற்றபடி மேக்கப்பை விரும்பாத ஆள் நான் என்று சாரா அர்ஜுன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும், அதிகமாக மேக்கப் போட்டு முகத்தின் அழகை கெடுத்து விடாதீர்கள் என்றும் அவர் ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

