அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தாக்குதல் நடத்திய நிலையில், அதற்கு பதிலடியாக ஈரானும் கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இந்த மோதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த பதற்றம் மேலும் தீவிரமடைந்த நிலையில், ஈரான் நேற்று முதல் இஸ்ரேல் மட்டுமல்லாமல் மத்திய கிழக்கில் அமெரிக்காவின் கூட்டாளி நாடுகளான பஹ்ரைன், குவைத், கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பகுதிகளிலும் ஏவுகணைத் தாக்குதல்களை நடத்தியதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில், துபாயில் நடைபெற்ற கார் பந்தய நிகழ்ச்சிக்காக நடிகர் அஜித் தங்கியிருந்தார். அங்கு ஏற்பட்ட தாக்குதல் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப்பட்டதால் அவர் உடனடியாக சென்னை திரும்ப முடியாமல் துபாயிலேயே தங்கியிருந்தார்.

இதுகுறித்து நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா, “அஜித் பாதுகாப்பாக உள்ளார்” என முன்பே தகவல் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், துபாயில் இருந்த நடிகர் அஜித் இன்று பாதுகாப்பாக சென்னை திரும்பியுள்ளார். அவரது வருகையால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

