பொதுவாக பெண்கள் பலரும் பிரச்சனையாக நினைப்பதும், முகத்தின் அழகை கெடுப்பதும் முகப்பருக்கள். இதற்காக, பெண்கள் பலரும் அழகு சிகிச்சைகளை செய்து கொள்கிறார்கள். ஆனால் பருவநிலை மாற்றம், ஹார்மோன் பிரச்சனைகள் உடலில் மாற்றம். உணவு பழக்க வழக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், முகப்பருக்கள் ஏற்படுகிறது.

Table of Contents
இவற்றுள் சருமத்தில் எண்ணெய் பசை அதிகரிப்பு கிருமி தொற்று ஹார்மோன் சுரப்பு உள்ளிட்டவை முக்கிய காரணிகளாக கருதப்படுகிறது. சிலர் முகப்பருக்களை கைகளால் கொண்டு அடிக்கடி தொடுவார்கள்.

மேலும், அவற்றை கிள்ளி எரிந்து விடுவார்கள். இது மிகவும் தவறானது. அவ்வாறு செய்வதால், முகப்பருக்கள் சருமத்தின் மற்ற பகுதிகளுக்கு பரவக்கூடும். இதனுடைய, தொற்று முற்றிலும் பரவக்கூடிய ஒன்று.

முகப்பருக்களின் மீது கை வைக்கக்கூடாது. சருமத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். வெளியில் சென்று வந்த பிறகு கண்டிப்பாக முகத்தை நீரினால் கழுவ வேண்டும். சருமத்தில் உள்ள எண்ணெய் செயல் நீக்க வேண்டும். அதிக எண்ணெய் பசை சருமத்தில் சேராதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

முகத்தை தண்ணீர் கொண்டு கழுவ வேண்டும். சோப்பு, கிரீம் கொண்டு அல்லது வெறும் தண்ணீரால் கழுவி முகத்தை சுத்தமான துணியை பயன்படுத்துவது சிறந்தது. வெயிலில் சென்றால், சன் ஸ்கிரீம்களை பயன்படுத்தலாம்.

மேலும், தேவையற்ற ரசாயன பொருட்களை சருமத்தில் பயன்படுத்துவதை தடுப்பது சிறந்தது. உங்கள் சருமத்திற்கு ஏற்றவாறு சோப்பு, ஃபேஸ் வாஷ் அல்லது கிரீம்களை தேர்வு செய்து பயன்படுத்துங்கள். பயன்படுத்தும் உடைகள் குறிப்பாக தலையணை, டவல் ஆகியவற்றை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.
வேப்பிலை

முகப்பொருட்களை விரட்ட வேப்பிலை சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. வேப்பிலை அரைத்து முகத்தில் பேஸ் பேக்காக போட்டு பயன்படுத்தலாம்.
மஞ்சள்

அடுத்ததாக, முகப்பருக்களை விரட்ட மஞ்சள் சிறந்து தினமும் காலை, மாலை இரு நேரங்களில் முகத்தில் மஞ்சள் தடவி விட்டு குறிப்பாக பருக்கள் இருக்கும் பகுதியில் தடவி விட்டு 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். வேப்பிலையும், மஞ்சள் இரண்டையும் சேர்த்தும் பயன்படுத்தலாம்.
ரோஸ் வாட்டர்

முகத்தை கழுவிய பின்னர் ரோஸ் வாட்டர் அல்லது பன்னீரை தடவி வர பருக்கள் இன்றி முகம் பொலிவுடன் இருக்கும். சருமத்தில் உள்ள அழுக்குகளும் நீங்கிவிடும்.
சந்தனம்

முன்னதாக, சந்தனத்திற்கு சருமத்திற்கு குளிர்ச்சி தரக்கூடிய பண்பு உள்ளது. உடல் வெப்பநிலை காரணமாக பருக்கள் வரலாம். மேலும், முகத்தில் சந்தனத்தை அப்ளை செய்து விட்டு சிறிது நேரம் கழித்து தண்ணீர் கொண்டு கழுவ சிறந்த பலனை அடையலாம்.
கற்றாழை

கற்றாழை சருமத்துக்கு மிகவும் நல்லது. இது சருமத்திற்கு குளிர்ச்சியை தருவதுடன் முகப்பருக்களை சரி செய்கிறது. இது போன்ற வழிமுறைகளையும் பின்பற்றி முகப்பருக்கள் குறையவில்லை. எனில், சரும மருத்துவரை அணுகுவது சிறந்தது.
உணவுகள்
- முகப்பருக்களை விரட்ட சில உணவுகளை சேர்த்துக் கொண்டால் போதும். சருமத்திற்கு பொழிவு தரும் காய்கறிகள் பழங்களை சாப்பிட வேண்டும்.
- தினமும் ஒரு ஆரஞ்சு பழம் அல்லது ஒரு டம்ளர் ஆரஞ்சு ஜூஸ் பருகலாம். இது சருமத்தில் உள்ள அழுக்குகளை நீக்குகிறது. கொய்யா, பப்பாளி, மாதுளை உள்ளிட்ட பழங்களை சாப்பிடலாம்.
- பாதாம், அக்ரூட் பருப்புகள், முந்திரி, பிஸ்தா ஆகிய ஒமேகா3 அமிலங்கள் கொண்ட நட்ஸ் வகைகளை தினமும் சிறிதளவு எடுத்துக் கொள்ளலாம்.

- தினமும் ஒரு கேரட் அல்லது ஒரு டம்ளர் கேரட் ஜூஸ் சாப்பிடலாம். கீரை, முட்டைகோஸ், பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு ஆகியவற்றை காய்கறிகளாக எடுத்துக் கொள்ளலாம்.
- உடல் சூடாக இருப்பதால் முகப்பருக்கள் வருகிறது. எனவே, உடல் சூட்டை தணிக்க கூடிய உணவு வகைகளை அதிகப்படியாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

- குறிப்பாக மோர், இளநீர் ஆகிய ஆகாரங்களை குடித்து வர கொழுப்புகள் நிறைந்த உணவுகள்.
- எண்ணெய் பொருட்கள், எண்ணெயில் பொறித்த உணவுகளை உண்பதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சாக்லேட், ஐஸ்கிரீம், வெண்ணை ஆகியவற்றை அளவோடு சாப்பிடுவது சிறந்தது.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

