டெய்லியும் காலையில இட்லி தோசை சப்பாத்தினு சாப்பிட்டு, போர் அடிச்சு போச்சா உங்க வீட்ல மூங்கில் அரிசி இருந்தா, இதை ஒரு டைம் ட்ரை பண்ணி பாருங்க பொதுவா மூங்கில், அரிசில கஞ்சி தான் சாப்பிட்டு இருப்போம். ஆனால், இந்த கிச்சடி செய்யும் போது கேட்டு கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க அந்த அளவுக்கு இது ருசியா இருக்கும்.
தேவையான பொருட்கள்
- 1 கப் மூங்கில் அரிசி
- 1 ஸ்பூன் எண்ணெய்
- 1 ஸ்பூன் நெய்
- 1 பட்டை
- 2 கிராம்பு
- 2 ஏலக்காய்
- 10 முந்திரி
- 1 வெங்காயம் (பொடியாக நறுக்கியது)
- 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
- 1 தக்காளி (பொடியாக நறுக்கியது)
- 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
- சுவைக்கேற்ப உப்பு
- 3 பச்சை மிளகாய்
- 1 கைப்பிடி புதினா
- 5 (பொடியாக நறுக்கியது) பீன்ஸ்
- 1 (பொடியாக நறுக்கியது) கேரட்
- 1/4 கப் பச்சை பட்டாணி
- 3 கப் தண்ணீர்
- சிறிது கொத்தமல்லி
செய்முறை
Step 1: முதலில் மூங்கில் அரிசியை நீரில் இரண்டு முறை கழுவிக்கொள்ள வேண்டும். பின்னர், ஒரு கடாயை அடுப்பில் வைத்து கழுவி அரசியை சேர்த்து நன்கு வறுத்து ஆறவிட்டு எடுத்து வைக்க வேண்டும்.
Step 2: பின்னர், மிக்ஸர் ஜாரில் வறுத்த அரிசியை சேர்த்து கொரகொரவென்று பொடியாக எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, ஏலக்காய், முந்திரி சேர்த்து நன்றாக வறுக்க வேண்டும்.
Step 3: பிறகு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வரும்வரை நன்றாக வதக்க வேண்டும். வெங்காயம் கருகிவிடக்கூடாது, அதன் பின்னர் இஞ்சி, பூண்டு பேஸ்ட் சேர்த்து பொடியாக நறுக்கிய தக்காளியும், சேர்த்து வதக்க வேண்டும்.
Step 4: பின்பு அதில் மஞ்சள் தூள் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து தக்காளி மென்மையாகும் வரை நன்றாக வதக்க வேண்டும். பின்னர், அதில் மூன்று பச்சை மிளகாயை லேசாக கீறி போட்டு அத்துடன் புதினா நறுக்கி கேரட், பீன்ஸ் பச்சை பட்டாணி ஆகியவற்றை சேர்த்து நன்கு இரண்டிலிருந்து மூன்று நிமிடங்கள் வதக்க வேண்டும்.
Step 5: அதன் பின்னர், அதில் மூன்று கப் நீரை ஊற்றி நன்றாக கொதி வந்ததும் அரைத்து வைத்துள்ள மூங்கில் அரிசி பொடியை சேர்த்து உப்பு சுவை பார்த்து வேண்டுமானால், உப்பை சேர்த்து சேர்க்கலாம். 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும் விசில் போனதும், குக்கரை திறந்து அதில் சிறிது கொத்தமல்லியை தூவி பரிமாறுதல் சுவையான மூங்கில் அரிசிக்கு செடி தயார்.

