அரசு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் தி.மு.க பிரமுகர் குடும்பத்துடன் குடியேறிய நிலையில், அப்பகுதியினர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
தமிழகத்தில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்களின் உயிர் காக்கும் அரணாகத் திகழும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், மகப்பேறு முதல் அவசர சிகிச்சை வரை 24 மணி நேரமும் இலவச சேவைகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில், கோவையில் மக்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ஒரு நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தையே தனது சொந்த வீடாக மாற்றி, தி.மு.க பிரமுகர் ஒருவர் குடும்பத்துடன் ‘செட்டில்’ ஆகியிருக்கும் பகீர் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்து உள்ளது.
கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட வடவள்ளி 36-வது வார்டு பகுதியில் அமைந்து உள்ள இந்த அரசு கட்டிடத்தை, வடவள்ளி பகுதி தி.மு.க பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, அங்கே குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
மருத்துவ உபகரணங்கள் இருக்க வேண்டிய இடத்தில் சமையல் பாத்திரங்கள் வாஷிங்மெஷின்கள் கட்டில் பீரோ போன்றவற்றை வைத்து குடும்பம் நடத்தி வருகின்றனர்.

