சரஸ்வதி என்ற தெலுங்கு படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்க உள்ளார் நடிகை வரலட்சுமி சரத்குமார். படத்தின் பிரமோஷன் விழாக்கள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில் கலந்துகொண்ட ராதிகா சரத்குமார் பேசினார்.

அதில், ராதிகா சரத்குமார் பேசியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. வரலட்சுமி சரத்குமார் சிறந்த நடிகை என்று அனைவரும் அறிந்த விஷயம். ஆனால், நான் அவருக்கு ஒரு அட்வைஸ் கொடுத்தேன். அதாவது, நீ தெலுங்குல போய் நடி அங்கு உனது திறமைக்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள் என்று கூறினேன்.
ரசிகர்கள் உனது வெற்றியை கொண்டாடுவார்கள் என்று கூறினேன். இதை யாரும் தவறாக நினைக்க வேண்டாம். நான் இப்படி சொன்னேன் என்பதற்காக தமிழில் மதிக்க மாட்டார்கள் என்று அர்த்தம் கிடையாது. அங்கு மதிப்பும் வரவேற்பும் நம் வளர்ச்சியை உச்சத்திற்கு கொண்டு செல்லும்.

நானும் தெலுங்கில் நடித்துள்ளேன். எனக்கும், தெலுங்கில் நல்ல படங்கள் உள்ளது. சில ஆண்டுகள் தெலுங்கில் நடித்துவிட்டு ஒரு நாள் என்னிடம் வந்து நான் ஹைதராபாத்துக்கு மொத்தமாக ஷிப்ட் ஆகிவிடலாம் என்று இருக்கிறேன் என்று வரலட்சுமி கூறினார்.
அது எனக்கு ஆச்சரியத்தை எல்லாம் கொடுக்கவில்லை. நான் சொன்னதைப் போல தொடர்ந்து, சினிமா ரசிகர்கள் வரலட்சுமி நடிப்பை பாராட்டி ஊக்குவித்தார்கள். இயக்குனராகவும், வரலட்சுமி வெற்றி பெறுவார் என்று அதில் பேசியிருந்தார்.

