விஜய் மீது ஒவ்வொரு நாளும் விமர்சனங்கள் குவிந்து வருகிறது. அரசியலில் கால் பதித்துள்ள விஜய் மீது அவர் மனைவி சங்கீதா விவாகரத்து கேட்டு மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
2021ல் இருந்தே பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், நடிகையுடன் திருமணத்தை மீறி உறவு வைத்துள்ளதாகவும், எனக்கு நெருக்கடி ஏற்படும் பட்சத்தில் அந்த நடிகை யார் என வெளியே சொல்லுவேன் என விஜய் மனைவி சங்கீதா கூறியிருந்தார்.

ஆனால் விஜய் இது பற்றி ஒரு வார்த்தை கூட வெளியில் சொல்லவில்லை, தான் உண்டு தனது அரசியல் பணி உண்டு, என அவர் தனது அரசியல் நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். ஒரு பக்கம் அரசியல் பணிகளில் கவனம் செலுத்தி வரும் விஜய், நேற்று முன்தினம் சினிமா தயாரிப்பாளர் கல்பாத்தி சுரேஷ் மகனின் திருமண நிகழ்ச்சிக்கு திரிஷாவுடன் ஒன்றாக பங்கேற்றது சர்ச்சையை கிளப்பியது.

விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் இப்படி செய்கிறாரா என நெட்டிசன்களும் கேள்வி எழுப்பினர். ஆனால் மொத்தத்தில் அரசியலில் விஜய்க்கு கெட்ட பெயரை உண்டாகும் விதத்தில் இப்படி செய்திகள் பரபரப்பபடுகிறது என ஒரு தரப்பினர் விஜய்க்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.

முன்னதாக, பல பிரபலங்களும் விஜய் மற்றும் த்ரிஷாவை தாக்கி பேசி வருகின்றனர். அந்த வகையில், நடிகர் பார்த்திபன் ஒரு நிகழ்ச்சியில், பேசும் பொழுது அவரிடம் பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்த த்ரிஷா போட்டோவை காட்டி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் த்ரிஷா வீட்டிலே இருந்தால் நல்லது என கூறி இருக்கிறார்.

“குந்தவை இப்போ வீட்டுக்குள்ளே குந்தவைக்கப்பட்டால் நல்லது. எல்லா விஷயத்தையும் வெளிப்படையாக பேச முடியாது”
என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், விஜய் விவகாரம் பற்றி பார்த்திபன் இப்படி பேசி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

