வெள்ளித் திரையில் தனது சிரிப்பால் மயக்கும் நடிகை சினேகா புன்னகை அரசி என மக்களால் கொண்டாடப்படுகிறார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். குழந்தைகள் கொஞ்சம் வளர மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார் நடிகை சினேகா. அதே சமயம், படங்களில் நடிப்பதை தாண்டி சின்னத்திரை நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

சினேகாலயா சில்க்ஸ் என்ற துணிக்கடையை ஆரம்பித்து அதிலும், கல்லா கட்டி வருகிறார். சென்னையில் கடையை துவங்கி இவர் தற்போது கோயம்புத்தூரிலும் திறந்து உள்ளார்.
இன்று மகளிர் தின ஸ்பெஷலாக நடிகை சினேகா அழகிய போட்டோஷூட் ஒன்றை நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை அவரது சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

