கடந்த சில வாரத்தில் இருந்து நடிகரும் தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் குறித்த பேச்சு பரவலாக பேசப்பட்டு வருகிறது. முன்னதாக, அவரது மனைவி சங்கீதா நீதிமன்றத்தில் அளித்துள்ள விவாகரத்து மனு குறித்துதான் பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், தனது விவாகரத்து மனுவில் விஜய் வேறொரு நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் உள்ளதை நான் கண்டுபிடித்து கண்டித்து விட்டேன். ஆனாலும், அவர் தொடர்ந்து அந்த நடிகையுடன் சுற்றிக்கொண்டு உள்ளார். நடிகையுடன் புகைப்படங்களை பொதுவெளியில் பகிர்ந்தார். அவை எனக்கும் எனது குழந்தைகளுக்கும் பெரும் மனக்கவலை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் மீதான இந்த குற்றச்சாட்டு பெரும் அதிர்ச்சியும் பலருக்கு ஏற்படுத்தியது. இந்நிலையில், தவெக சார்பில் நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்டத்தில் நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதா குறித்து பேசினார். அதாவது, அவரது விவகாரத்து வழக்கு குறித்து பேசி உள்ளார்.
அதில், இப்போது நடைபெற்று இருக்கும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிரச்சனை குறித்து நீங்கள் எனக்காக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறீர்கள். சிலர் அழவெல்லாம் செய்கிறீர்கள். அவ்வளவு, கஷ்டப்பட வேண்டாம். அந்த அளவுக்கு வொர்த் இல்லை. நான் அதெல்லாம் பார்த்துக் கொள்கிறேன். நாம் அனைவரும் சேர்ந்து மக்கள் பிரச்சினையை பார்க்கலாம் என்று பேசி உள்ளார்.
#ThalapathyVijay:
— AmuthaBharathi (@CinemaWithAB) March 7, 2026
"There are many controversies going on recently, I can see many of you are supporting & got hurt with that. by seeing that myself is getting hurt. I will take care of that. Let's concentrate only on people issues. Those issues are not worth at all, so don't hurt… pic.twitter.com/IPBnppJIXU

