சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மாமல்லபுரத்தில் நட்சத்திர ஓட்டலில் தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் இன்று விழா நடத்தப்பட்டது. இதில், 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மகளிர் காண பிரத்யோக திட்டங்கள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை விஜய் அறிவித்தார்.
விஜய் அறிவித்த முக்கிய வாக்குறுதிகளின் தொகுப்பு
அண்ணன் சீர் திட்டம்
அதில், பெண்களின் திருமணத்திற்காக ஒரு பவுன் தங்கமும் தரமான பட்டு சேலையும், தாய் வீட்டில் இருந்து அதாவது அண்ணன் சீராக வழங்கப்படும்.
மாதாந்திர உதவித்தொகை
60 வயது வரையுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் தோறும் ₹2,500 வழங்கப்படும்.
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ்
மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு மட்டும் நிதியிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்படுகிறது. வரும் தேர்தலில் தேர்தல் நேரத்தில் மட்டும் கேஸ் விலை குறைக்கப்படுகிறது. சமையல் கேஸ் விலை நம் வீட்டு பெண்களுக்கு பெரும் சுமையாகவே உள்ளது. விலை உயர்வு காதுகளில் புகை, கண்களில் நீர் வருகிறது. அதை போக்க அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆண்டுக்கு 6 கேஸ் சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.
பெண்கள் பாதுகாப்பு
பெண்களுக்கு எதிரான குற்றங்களை விசாரிக்க அஞ்சலை அம்மாள் அதிவிரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.
பள்ளி இடைநிற்றல் தடுப்பு
பெண் குழந்தைகள் படிப்பைப் பாதியில் நிறுத்துவதைத் தவிர்க்க, தாய் அல்லது பாதுகாவலருக்கு ஆண்டுக்கு ₹15,000 நிதியுதவி அளிக்கப்படும்.
அரசு ஆசீர்வாதம்
தமிழ்நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தையையும் வரவேற்கும் விதமாக அரசாங்கத்தின் ஆசிர்வாதமாக தங்க மோதிரம் வழங்கப்படும். கூடவே பேபி வெல்கம் கிட் வழங்கப்படும்.
அனைத்து பேருந்துகளிலும் இலவசம்
கட்டணமில்லா பேருந்து என அறிவித்துவிட்டு அது பிங்க் நிற பேருந்தில் பயணம் செய்தால் என அறிவித்து இருப்பதால் பெண்களுக்கு கல்லூரி மாணவிகளுக்கும் மிகவும் சிரமம் அடைகின்றனர். இதனை தடுக்கும் விதமாக தமிழக அரசின் அனைத்து பேருந்துகளிலும் பெண்கள் இலவசமாக பயணம் செய்ய உத்தரவிடப்படும். இதன் மூலமாக எந்த இடத்திலிருந்தும் எந்த இடத்திற்கு முன் பெண்கள் கட்டணம் இன்றி பயணம் செய்யலாம்.
ராணி வேலுநாச்சியார் படை
பெண்களுக்கு எதிரான குற்றம் இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும் என்பது எனது மிகப்பெரிய கனவு. இரண்டு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை விமான பணி பெண்ணிற்கு நேர்ந்த கொடுமை இவை அனைத்தையும் தடுக்க வேண்டும் ராணி வேலுநாச்சியார் படை உருவாக்கப்படும். இவர்கள் சாதாரண உடலில் இருப்பார்கள் அந்த படையினர் ‘பாடி கேம்ப்’ மூலமாக ஆங்காங்கே பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பார்கள்.
ஸ்மார்ட் பேனிக் பட்டன்
பேருந்தில் பயணம் செய்யும் பெண்களின் பாதுகாப்பிற்கு வசதியாக ‘ஸ்மார்ட் பேனிக் பட்டன்‘ 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும். இந்த பட்டன்கள் அனைத்து பேருந்துகள் ஷேர் ஆட்டோகளிலும் பொருத்தப்படும்.
தனித் துறை
பெண் குழந்தைகள் நலனில் பாதுகாப்பில் அக்கறை செலுத்த தவெகவில் தனித்துறை ஏற்படுத்தப்படும். அந்த இலாகா நேரடி கட்டுப்பாட்டு கண்காணிப்பில் இருக்கும்.
விலையில்லா நாப்கின்
ரேஷன் கடை பள்ளி கல்லூரிகள் மூலம் அனைத்து பெண்களுக்கும் விலையில்லா சானிடரி நாப்கின் வழங்குவது உறுதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

