தலையில் பேன் தொல்லை என்பது பலருக்கு ஏற்படக்கூடிய ஒரு பொதுவான பிரச்சனை. இதை நீக்க பல்வேறு வழிகள் இருந்தாலும், இதில் பேன் சீப்பின் பங்கு தான் அவசியமானது. பொதுவாக, பேன் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு நேரடி தொடர்பு மூலம் பரவுகிறது.
பேன் இருக்கும் ஒருவரின் தலையிலிருந்து மற்றொருவருக்கு எளிதாக பரவக்கூடியது. குழந்தைகளின் தலையில் பேன் மற்றும் ஈறு தொல்லை இருந்து கொண்டே இருக்கும்.

மேலும், தலைக்கு எண்ணெய் வைத்து சீப்பால் வாரி எடுத்தாலும் பேன் குறைந்த பாடு இருக்காது. தலையை சுத்தமாக வைத்துக் கொண்டாலே இந்த பேன் மற்றும் ஈறு பிரச்சனைகளை விரைவில் தவிர்க்கலாம்.
குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் வாரம் இரு முறை தலைக்கு நல்லெண்ணெய் வைத்து குளிப்பாட்டுவது சிறந்தது. கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருப்பதற்கு இதை தொடர்ந்து செய்து வரலாம்.
வேப்பிலை மற்றும் படிகாரம் இரண்டுமே ஆன்ட்டி வைரல் தன்மை கொண்டவை. தலையில் உள்ள பேன் மற்றும் ஈறுகளை போக்குவதுடன் அவற்றை மறுபடி வராமல் காக்கும்.

நல்லெண்ணெய் தடவி 30 நிமிடங்கள் ஊறவிட்டு பேசிப் பால் நன்கு வாரினால் பேன்கள் அனைத்தும் வந்துவிடும்.
பின் வெற்றிலை பேஸ்ட்டை தடவி சீகக்காய் அல்லது ஷாம்பு போட்டு தலையை சுத்தப்படுத்தலாம். இப்படி செய்தால், பேன் மற்றும் ஈறு தொல்லையில் இருந்து விடுபடலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

