பொதுவாக மீந்து போன இட்லி இருந்தால், உப்புமா தான் செய்து பார்த்திருப்போம். ஆனால், அந்த மீந்து போன இட்லியை கொண்டு மாலை வேலையில் குழந்தைகளுக்கு அருமையான சுவையில் வடை சுட்டு கொடுக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? அது குறித்து இந்த பதிவில் காண்போம்.
தேவையான பொருட்கள்
- ஆறு மீந்து போன இட்லி
- இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசி மாவு
- கால் டீஸ்பூன் உப்பு
- ஒரு கொத்து கருவேப்பிலை
- சிறிய துண்டு இஞ்சி பொடியாக நறுக்கியது
- ஒரு பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய்
- ஒரு பொடியாக நறுக்கியது வெங்காயம்
- பொடியாக நறுக்கிய சிறிய கொத்துமல்லி
- தேவையான அளவு எண்ணெய்

செய்முறை
Step 1: முதலில் மீந்து போன இட்லியை நன்கு உதிர்த்துக் கொள்ள வேண்டும். அதன் பின்னர், அரிசி மாவு, உப்பு, கருவேப்பிலை, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
Step 2: பின்னர் அதில் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை தூவி நன்கு பிசைந்து விட வேண்டும். பிறகு அதில் கொஞ்சம் கொஞ்சமாக நீரை தெளித்து சப்பாத்தி மாவை விட சற்று மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.
Step 3: பின்னர் கையில் சிறிது எண்ணெயை தடவி பிசைந்து வைத்துள்ள மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து உருட்டி தட்டையாக தட்டி நடுவே துளையிட்டு ஒரு தட்டில் தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
Step 4: இறுதியாக ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி எண்ணெய் சூடானதும் தட்டி வைத்துள்ள வடையை போட்டு பொன்னிறமாக பொறுத்து எடுத்தால் சுவையான இட்லி வடை தயார்.

