எதிர்நீச்சல் சீரியலின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து அந்த தொடரின் இரண்டாம் பாகம் சன்டிவில் ஒளிபரப்பாகி வருகிறது.
ஆதி குணசேகரன் என்ற திமிர் பிடித்த குடும்பத்திடம் மருமகளாக வரும் பெண்கள், அந்த வீட்டில் உள்ள பிரச்சனைகளை கடந்து எதிர்நீச்சல் போட்டு வருகின்றனர்.
அந்த தொடரில் நடித்தவர் நடிகை கனிகா. மலையாள வரவாக சினிமாவில் நுழைந்த அவருக்கு குறைவான வாய்ப்புகளே அமைந்தாலும், எதிர்நீச்சல் சீரியல் மூலம் அவருக்கு இன்னொரு இன்னிங்ஸ் கிடைத்துள்ளது.
இதனிடையே எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில், ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் அவர் சில மாதங்களாக சீரியலில் வரவே இல்லை. போதாக்குறைக்கு ஆதி குணசேகரன் தாக்கி ஆபத்தான கட்டத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது போல காட்சி அமைந்திருந்தது.
அதன் பின் அவரை காமிக்கவே இல்லாமலும், மருத்துவமனையில் இருந்து அடிக்கடி ஃபோன் செய்து மருத்துவர்கள், செவிலியர்கள் பேசுவது போல காட்சி வந்து கொண்டுள்ளது.
இந்த நிலையில்தான் அவர் சீரியலில் இருந்து விலகியுள்ளார். காரணம், அவர் மகன் 10ஆம் வகுப்பு படித்து வருவதால் கூட இருந்து கவனிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளதால், விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தற்காலிக விலகலா அல்லது நிரந்தரமான விலகலா என்பது தெரியவில்லை. ஏனென்றால், ஈஸ்வரி முழுவதும் குணமடைந்துவிட்டதாகவும், மருத்துவ செலவு ர.50 லட்சம் செலுத்த வேண்டும் என மருத்துவமனையில் போன் வந்ததால், ஜனனி அந்த பணத்துக்கு என்ன செய்ய போகிறார் என்பது போல தற்போது கதை நகர்ந்து வருகிறது.
சரி விஷயத்துக்கு வருவோம், ஈஸ்வரி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கனிகாவுக்கு ஒரு நாள் நடிக்க ரூ.15 முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

