என்னாலயே என்னை கட்டுப்படுத்த முடியவில்லை என சிம்பு பட நடிகை வருத்தம் தெரிவித்த பேச்சு சினிமாவை அதிர வைத்துள்ளது.
தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படங்களில் முன்னணி நடிகையாகத் திகழும் நிதி அகர்வால், தனது உடல் எடை மாற்றம் குறித்து வெளிப்படையாகப் பேசியிருப்பது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது.
இதுகுறித்து அவர் கூறியதாவது: “சமீப காலமாக ‘திடீரென உடல் எடை அதிகரித்துவிட்டது’, ‘மீண்டும் விரைவாக குறைத்துவிட்டீர்கள்’ என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள்.
உண்மையில் என் உடல் எடை அடிக்கடி மாறிக்கொண்டே இருக்கிறது. அதற்கான சரியான காரணம் என்னவென்று எனக்கே புரியவில்லை. சில நேரங்களில் என்னை நான் கட்டுப்படுத்த முடியாத நிலையும் உருவாகிறது.

அந்த சூழலை மாற்ற வேண்டும் என்பதால், தற்போது திட்டமிட்ட உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாட்டை கடைப்பிடிக்க தொடங்கியுள்ளேன்,” என தெரிவித்துள்ளார்.
தமிழில் Eeswaran, Bhoomi மற்றும் Kalagathalaivan ஆகிய படங்களில் நடித்துள்ள Nidhhi Agerwalக்கு, சென்னையில் ரசிகர்கள் கோவில் கட்டி வழிபட்ட சம்பவமும் பெரும் கவனம் பெற்றது குறிப்பிடத்தக்கது.

