மிகப்பெரிய ஹிட் திரைப்படமான ‘லப்பர் பந்து’ இரண்டு வருடங்களுக்கு முன்பு வெளியானது அனைவரும் அறிந்த விஷயமே. இந்த திரைப்படத்தில், ஹீரோயினாக நடித்திருந்தவர் சுவாசிகா அந்த ஒரே படம் தான் அவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.

அதன் பிறகு அவருக்கு அதிக பட வாய்ப்புகள் குவிந்து வந்தது. குறிப்பாக, அவர் நடித்த மாமன் திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று, அவருக்கு இன்னும் பட வாய்ப்புகளை அள்ளிக் கொடுத்தது.
இந்நிலையில், சமீபத்தில் இஸ்ரேல், ஈரான் போர் காரணமாக அரபு நாடுகளிலும் கடும் பதற்றம் நிலவியது. ஈரான் தாக்குதல், நடத்திய காரணத்தினால் துபாய் உள்ளிட்ட அனைத்து விமான நிலையங்களும் மூடப்பட்டன.

அபுதாபியில் இருந்த நடிகை சுவாசிகா நாடு திரும்ப முடியாமல் கடந்த மூன்று நாட்களாக தவித்து வந்தாராம். தற்போது, விமானம் மூலம் நாடு திரும்பி இருக்கும் இவர் உருக்கமான பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதில், அவர் கூறியதாவது அங்கு பதற்றம் அதிகமாக இல்லை. ஆனால், நான் வேறு நாட்டவர் என்பதால் இயல்பாகவே அதிக பயம் ஏற்பட்டது. விமான நிலையம் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தது என நடிகை சுவாசிகா அந்த வீடியோவில் தெரிவித்து இருந்தார்.
Malayalam actress Swasika, who arrived at Cochin International Airport from Abu Dhabi, said there was no heavy panic but admitted to some concern as she was in another country. She added that everything was under control.#Swasika #Kochi #CochinAirport #AbuDhabi #MalayalamCinema pic.twitter.com/CfzuXFaLSH
— The Federal (@TheFederal_News) March 4, 2026

