விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழக கட்சியின் மூன்றாம் ஆண்டு தொடக்க விழாவில் பாடகர் வேல்முருகன் பாடிய பாடல் அரசியல் சர்ச்சையை கிளப்பின் நிலையில், இந்த விவகாரம் குறித்து அவர் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்று அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அந்த விழாவில், நடிகர் விஜயின் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாடிய போது பாடகர் வேல்முருகனுடன் விஜய் இணைந்து விஜய் நடனம் ஆடி இருந்த வீடியோவும் வைரலாக இருந்தது.
அதற்கு பிறகு முருகன் பாடலை அவமதித்து விட்டார் என வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுக்கு எல்லாம் கேஸ் போடுவீங்களா? என அப்போது நான் நினைத்தேன்.

சிலர் தங்கள் எண்ணம் போல பேசினார்கள். நான் இரண்டு நாள் அறையை விட்டு வெளியே வரவில்லை. மேலும், பெரிய கச்சேரிக்கு போனால் கூடவே பயமாகவே இருந்தது.
நான் எந்த கட்சியிலும், இல்லை. நான் எல்லோருக்கும் பொதுவானவன். ஒருத்தன் நல்லா இருக்கக் கூடாது அப்படி இருந்தால் எவனா எதையாவது செய்யணும் என செய்கிறார்கள். உடன் இருந்த என் பெண் குழந்தையை குழந்தை என்று கூட பாராமல் அப்படி பேசுகிறார்கள் என வேல்முருகன் காட்டமாக பேசி இருந்தார்.

