பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு நமது பாரதப் பிரதமர் திரு.
நரேந்திர மோடி அவர்கள் நேற்று வந்திருந்த நிலையில், ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதைக் கண்டித்து சென்னையில் உள்ள அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட முஸ்லீம் அமைப்புகளுக்கு அனுமதி வழங்கியது அதிர்ச்சியளிக்கிறது.
பிரதமரின் வருகையின் போது மாநிலம் முழுவதும் சட்டம் ஒழுங்கைப் பேணி கட்டுக்கோப்பாக வைத்திருப்பதைவிடுத்து, மாநிலத் தலைநகரிலேயே போராட்டங்கள் நகைபெறும் அளவிற்கு காவல்துறை மெத்தனமாக செயல்பட்டிருப்பது மிகுந்த கண்டனத்திற்குரியது.
நியாயமான கோரிக்கைகளுக்காக பொதுமக்கள் போராடும் போதெல்லாம் பாசிச கரம் கொண்டு ஒடுக்கிவிட்டு, நேற்று தலைநகரின் முக்கிய இடத்திலேயே சிலர் போராட அனுமதித்துள்ளது திமுக அரசின் உண்மை முகத்தை வெளிப்படுத்துகிறது.

மக்கள் நலனில் அக்கறையில்லாத திமுக அரசு தனது இந்த இரட்டை வேடத்தாலேயே அழியும் நாள் தொலைவிலில்லை! இவ்வாறு தனது அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

