சின்னத்திரை பிரபலமாக இருந்து வரும் நடிகை தேவிப்பிரியா சென்னையிலிருந்து பெரம்பலூருக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.
ஆஞ்சநேயர் கோவில் அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென்று கார் பஞ்சரானது. அப்போது, ஓட்டுநர் மற்றும் உதவியாளர் இருவரும் காரின் டயரை மாற்றிக் கொண்டிருந்தபோது, பின்னால் வந்த வாகனம் இவர்களின் கார் மீது பயங்கரமாக மோதியது.

இதில், கார் ஓட்டுநர் உயிரிழந்தார். தேவி பிரியா சிறு காயங்களுடன் உயிர்த்தப்பிய நிலையில், அவரது உதவியாளர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

