இயக்குனர் சுந்தரபாண்டியன் இயக்கத்தில் கடந்த 27 ஆம் தேதி பிக் பாஸ் ஆரியின் நடிப்பில் வெளியான ‘Fourth Floor‘ கிரைம் திரில்லர் பாணியில் உருவாகி இருக்கும் படம் குறித்த செய்தியாளர் சந்திப்பில் நடிகர் ஆரி பங்கேற்றார்.
அதில் விஜய், சங்கீதா விவாகரத்து குறித்து பேசிய விஷயம் அனைவரிடத்திலும், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. முன்னதாக, விஜய் சங்கீதா விவாகரத்து பற்றி ஆரியிடம் கேள்வி எழுப்பிய நிலையில், அதற்கு பதில் அளித்த ஆரி நடிகர்களின் வாழ்க்கை மட்டுமல்ல யாருடைய தனிப்பட்ட வாழ்க்கை பற்றி பேசுவதற்கு யாருக்கும் இங்கே உரிமை கிடையாது.

பொது வாழ்க்கைக்கு வரும்பொழுது இது போன்ற விஷயங்கள் முன்வைக்கப்படுகின்றன. அது ஒரு விவாத பொருளாகவே கருதப்படுகிறது. முன்பெல்லாம் பத்திரிகையாளர்கள் மீடியாக்கள் மட்டும்தான் இருந்தன. அவர்கள் ஒரு செய்தி சரியா? தவறா? என ஆராய்ச்சி செய்த பின்னரே வெளியிடுவார்கள்.

ஆனால், இன்றோ இப்போது பொய் செய்தியாக வெளியாகிறது. உண்மையை சொல்வதற்கு ஒரு மீட்டிங் போட வேண்டி இருக்கிறது. இதுவும் மிகவும் அபாயகரமான சூழலை ஏற்படுத்துகிறது. விஜய் சங்கீதா விஷயத்தில் என்னால் கருத்து சொல்ல முடியாது.
அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் என்ன நடந்தது என்று எனக்கு தெரியாது. திருமணம் விவாகரத்து அவருக்கு மட்டும் நடக்கவில்லை. யாருக்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். அது இரண்டு பேரின் வாழ்க்கையில் சம்பந்தப்பட்ட விஷயம்.

அதில், தனிமனிதராக இருந்து கொண்டு யாரும் கருத்து சொல்ல முடியாது. அடுத்தவர்களின் பாத்ரூமில் எட்டிப் பார்ப்பதற்கு யாருக்குமே உரிமை கிடையாது. பாத்ரூமையும், படுக்கையரையோ எட்டி பார்க்கும் கலாச்சாரம் மிகவும் அசிங்கமாக உள்ளது என்று பேசி இருந்தார்.

