ஜோடி படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் அறிமுகமானி முன்னணி நடிகையாக உயர்ந்தவர் நடிகை திரிஷா. 40 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்யாமல் சினிமா கேரியரில் படு பிஸியாக வலம் வருகிறார்.
திரிஷாவை சுற்றி ஏராளமான சர்ச்சைகள் பரவி வருகின்றன. ஆனால் எதற்கும் சளைக்காமல், பதிலடி கொடுத்து வரும் திரிஷா குறித்து அண்மையில் ஒரு கட்சி தலைவர் பிரபல நடிகருடன் ஒப்பிட்டு பேசியது வைரலானது.
இதன் பின் நேரடியாக கண்டனம் தெரிவித்த நடிகை திரிஷா, தற்போது அவரது பழைய பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.
கடந்த 2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் திரிஷா ஒரு பதிவை போட்டார். அதில் அவர் சேலையுடன் வெட்கி தலை குனிந்திருப்பது போலவும், அவர் தலையில் மல்லிகைப்பூவை யாரோ ஒருவர் வைப்பதும் போல அந்த புகைப்படம் இருந்தது.
மேலும் அந்த போட்டோவுக்கு கேப்ஷன் கொடுத்த திரிஷா, என்றும் காதல் வெல்லும் என்றும், பின்னணியில் சிநேகிதனே..ரகசிய சிநேகிதனே பாடல் ஒலித்தவாறு இணைக்கப்பட்டிருந்தது.

இந்த பதிவு அப்போது பெரியதாக எடுத்துக்கொள்ளாத ரசிகர்கள், தற்போது சர்ச்சைகள் ஓடிக் கொண்டிருக்கும் சமயத்தில், இணைத்து பார்த்து வருகின்றனர்.
ஓ அவருதான் அந்த ரகசிய சிநேகிதரா என நெட்டிசன்கள் கமெண்ட்ஸை போட்டு தாக்கி வருகின்றனர். ஒரு சிலர் இது பழைய பதிவு தான்.. இதை ஏன் தேவையில்லாமல் இணைத்து பேச வேண்டும் என திரிஷாவுக்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர்.
ஒவ்வொரு சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைத்து வரும் திரிஷா, இப்போது அவரை சுற்றி வரும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

