தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜயின் தனிப்பட்ட வாழ்க்கை தற்போது, பல்வேறு சிக்கல்கள் நிரம்பியுள்ளது என்று சொல்ல வேண்டும். தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் விஜய் சினிமாவை விட்டு விலகி அரசியலில் இறங்கினார்.
இந்த வருடம் வரும் தேர்தலில் இவரது கட்சி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. அடுத்த முதலமைச்சர் விஜய் தான் என்று சொல்லும் அளவிற்கு தொண்டர்களும், ரசிகர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விஜயின் வெற்றியை எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் இடியை இறக்கியது போல், மனைவி சங்கீதா எதிர்பாராத நிலையில், விவாகரத்து கேட்டு நீதிமன்றத்தை நாடி உள்ளார்.
முன்னதாக, நடிகர் விஜய் 1999 ஆம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்தார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், இவரது மனைவி விஜயை பிரிந்து வாழ்கின்றார் என்ற பேச்சு அவ்வப்போது, சமூக வலைதளங்களில் பேசப்பட்டு தான் வந்தது.

தற்போது, சங்கீதா வைத்துள்ள அடுத்த குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்தது. அதாவது, விவாகரத்துக்கு முக்கிய காரணமாக நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்தது என்று சங்கீதா மனுவில் குறிப்பிட்டுள்ளாராம். நன்றாக சென்ற இவர்களின் வாழ்க்கையில் நடிகை ஒருவரால் விரிசல் ஏற்பட்டு உள்ளது.
இதனால், விஜயை விட்டு பிரிந்து லண்டனில் வாழ்ந்து வருவதாகவும் கூறியுள்ளார். பின்பு சமாதானமாக பேசி மீண்டும் அழைத்ததால் வாழ்ந்து வந்ததாகவும், ஒரே வீட்டில் இருந்தாலும், தனித்தனியாகவே வாழ்ந்து வருகிறோம் என்றும் தெரிவித்தார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு அந்த நடிகையுடன் தொடர்பில் இருந்ததாகவும், விஜய் அந்த நடிகையுடனான தொடர்பினை முறித்துக் கொள்ள அவரிடம் பேசிய போது சரி என்று ஒப்புக்கொண்டு ஆனாலும், இன்னும் தொடர்பினை கண்டினியூ செய்து வருகிறாராம்.
விஜய் தன்னை சுதந்திரமாக நடமாட விடாமலும், தனக்கான நிதி ஆதாரத்தை தடுத்தும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து செலவுக்கு கூட பணம் கொடுப்பதில்லை என்று சங்கீதா குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

இந்த பிரச்சனையால், உளவியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டதாகவும், குறித்த நடிகையின் பெயரை தற்போது நாகரீகம் கருதி வெளியே சொல்லவில்லை. ஆனால், தேவைப்பட்டால் ஆதாரத்தை வெளியிட்டு நடிகையின் பெயரை கூறுவேன் என்றும் சங்கீதா அந்த மனதில் தெரிவித்துள்ளார்.
மேலும், விஜயுடன் தொடர்பில் இருக்கும் நடிகையை எதிர் மனுதாரராக சேர்ப்பதாகவும், இத்தனை ஆண்டுகள் மகன் மற்றும் மகளின் நலன் கருதி அமைதியாக இருந்து வந்ததாகவும், இதற்குப் பின்பு தன்னால் வாழ முடியாது. மனதளவில் பாதிக்கப்பட்டு, சுயமரியாதையும் பாதிக்கப்பட்டுள்ளது என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும், இருவரும் பேசி பிரித்து விடலாம் என்று நினைத்ததாகவும், அதற்கு வழியில்லாமல் போனதால்தான் தற்போது திருமணத்தை சட்டரீதியாக முறித்து கொள்ள வேண்டும் என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சங்கீதா அந்த மனுவில் கூறி இருந்தது.
ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. இந்நிலையில், சங்கீதா பற்றி விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரிடம் சில காலத்திற்கு முன்பே பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் வேண்டாம். அவரைப் பற்றி பேச விரும்பவில்லை என ஒரே வரியில் முடித்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

