இட்லி தோசைக்கு எப்பவுமே சைட் டிஷ் அப்படின்னா தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, சாம்பார் இதுதான். என்ன சட்னி செய்யலாம்னு யோசிச்சு யோசிச்சு பல பெண்களுக்கு தலைவலியை வந்துவிடும். இட்லி, தோசைக்கு இந்த வகையான சட்னிகள் செய்து போர் அடித்து விட்டால், சற்று வித்தியாசமான சுவையில் இந்த ஆந்திரா ஸ்பெஷல் வறுத்த பூண்டு மிளகாய் சட்னியை ட்ரை செய்து பாருங்கள். இந்த சட்னி சுவையானதாக இருப்பதோடு இதை செய்வது மிகவும் எளிமையானது.
தேவையான பொருட்கள்
முழு பூண்டு
வர மிளகாய் 4
துருவிய தேங்காய் ஒரு கப்
புளி ஒரு இன்ச்
சமையல் எண்ணெய் ஒரு ஸ்பூன்
உப்பு தேவையான அளவு
தாளிக்க
வர மிளகாய் ஒன்று
கடுகு அரை டீஸ்பூன்
கருவேப்பிலை ஒரு கொத்து
எண்ணெய் ஒரு ஸ்பூன்
ஒரு சிட்டிகை பெருங்காயம்

செய்முறை
Step 1:முதலில் பூண்டை உரித்து சின்ன, சின்ன துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்னர், ஒரு வடசட்டியை சூடாக்கி எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
Step 2:எண்ணெய் சூடானதும், வரமிளகாயை போட்டு வதக்கி எடுத்து வைத்துக் கொள்ளவும். மிளகாய் வதங்கியதும் நறுக்கிய பூண்டுகளை சேர்த்து, குறைவான தீயில் வதக்கவும்.
Step 3: பூண்டு சிறிது பொன்னிறமாக மாறி வரும் வரை வதக்கவும். அதிகமாக வதக்க வேண்டாம்.
Step 4: வதக்கிய கலவையை ஒரு மிக்ஸி ஜார் அல்லது ஆட்டுக்கல்லில் வதக்கிய பொருட்களை போட்டு அதனுடன் துருவிய தேங்காய் சேர்த்துக் கொள்ளவும்.
Step 5: பின்னர் புளி மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து மென்மையான விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
Step 6: இதனுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மென்மையான பேஸ்ட் ஆக அரைத்து, ஒரு கிண்ணத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
Step 7: இந்த சட்னியை தாளிக்க ஒரு கடாயில் ஒரு ஸ்பூன் எண்ணெயை ஊற்றி சூடாக்கவும்.
Step 8: எண்ணெய் சூடானதும், கடுகு போட்டு தாளிக்கவும்.
Step 9: கடுகு வெடித்ததும் வரமிளகாய், பெருங்காயம் மற்றும் கருவேப்பிலை சேர்த்து இதனுடன் தாளிக்கவும்.
Step 10: இந்த தாளிப்பை கிண்ணத்தில் சேர்த்து நன்கு கிளறினால் ஆந்திரா ஃபேமஸ் வறுத்த பூண்டு மிளகாய் சட்னி ரெடி.

