சமூக வலைதளங்களுக்கு வந்தாலே விஜய்யை பற்றியும் அவரது மனைவியை பற்றியும் தான் பேச்சாக உள்ளது. விவாகரத்து சர்ச்சை விவாதமாக மாறியுள்ளது.
கடந்த சில வருடங்களாக விஜய் பங்கேற்கும் எந்த நிகழ்ச்சிகளிலும் அவரது மனைவி பங்கேற்காதது சர்ச்சை எழுந்தது. இருப்பினும் அது குறித்து விஜய் எதுவும் பேசாததால் இந்த பேச்சுகள் முடங்கியே இருந்தன.
ஆனால் நேற்று விஜய் மனைவி சங்கீதா, விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு குடும்பல நல நீதிமன்றத்தில் மனு அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
விவாகரத்து அதிர்ச்சியை விட, சங்கீதா வைத்த காரணங்கள்தான் அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவு விஜய் வைத்திருந்ததாகவும், தனக்கு நெருக்கடி ஏற்பட்டால் அந்த நடிகையின் பெயரை ஆதாரத்துடன் கூறுவேன் என சங்கீதா குறிப்பிட்டுள்ளார்.
நடிகையுடன் திருமணத்தை மீறி உறவு வைத்திருந்ததால் எனக்கும் விஜய்க்கும் 2021ஆம் ஆண்டு பிரச்சனை ஏற்பட்டது. தனது மகன் மற்றம் மகளுடன் லண்டனில் நான் வசித்து வந்தேன்.
பின்னர் பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை நடத்தி, அந்த தவறு மீண்டும் நிகழாது என விஜய் கூறியதால், சென்னை வந்தேன். ஒன்றாக ஒரே வீட்டில் இருவரும் வசித்து வந்தாலும், தனித்தனியே அறையில் தான் இருக்கிறோம். ஆனால் மீண்டும் அவர் நடிகையுடன் வெளிநாட்டுக்கும், நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.

மகன், மகளின் எதிர்காலத்திற்காக நான் எதையும் வெளியில் சொல்லாமல் இருந்தேன். ஆனால் இப்போது அவர்களுக்கே அவமானம் என்ற போது, என்னால் முடியவில்லை. அதனால் தான் விவாகரத்து வேண்டும் என நீதிமன்றத்தை நாடியதாக மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இவர்களது விவாகரத்து விவகாரம் குறித்து விவாதங்கள் சமூக வலைதளங்களில் காட்டுத்தீப் போல பரவி வருகிறது. இந்த நிலையில் விஜய் பேசிய பழைய வீடியோ ஒன்றை வைரலாகி வருகிறது.

அதில் பேசிய விஜய், நான் அழகாக இருக்கிறேனா என எனக்கு தெரியவில்லை, ஆனால் இதற்கு காரணம் என் தாய் மற்றும் என் மனைவி என்று நினைக்கிறேன், என் ரசிகர்களும் ஒரு காரணம்.
மகிழ்ச்சியாக இருந்தால் போதும் அழகு தானாக வந்துவிடும் என அந்த வீடியோவில் விஜய் பேசியிருந்தார். இதை பார்த்த ரசிகர்கள், மனைவி மீது விஜய்க்கு எவ்வளவு பாசம் என பூரித்து போனார்கள். ஆனால் தற்போது அப்படியே எதிர்மறையாகி கொண்டு போகிறதே என்ற ஆதங்கம் ஒவ்வொரு ரசிகர்களுக்குள் எழுந்து வருகிறது.

