நடிகர் விஜய் தற்போது தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியின் தலைவராக உள்ளார். வரும் 2026 தேர்தலில் போட்டியிட முனைப்பு காட்டி தீவிர பணிகளை ஆற்றி வருகிறது-
இந்த நிலையில் விஜய்யின் காதல் மனைவியான சங்கீதா விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளது சினிமா வட்டாரத்திலும், விஜய் ரசிகர்கள் மத்தியிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சங்கீதா, இலங்கையை சேர்ந்தவர் மட்டுமல்லாமல், விஜய்யின் தீவிர ரசிகையாக இருந்தவர். இருவரும் காதலித்து திருமணம் செய்த நிலையில், சஞ்சய், திவ்யா என இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.
தற்போது லண்டனில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார் சங்கீதா. அண்மைக் காலமாக விஜய் பங்குபெறும் நிகழ்ச்சிகளில் மனைவி பங்கேற்காதது குறித்து பலவிதமான விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டன.
ஆரம்ப காலத்தில் விஜய்க்கு உறுதுணையாக இருந்தவர் சங்கீதா. விஜய் உச்ச நட்சத்திரமாக இருக்க மனைவி சங்கீதாவும் ஒரு காரணம். விஜய்யின் பல படங்களுக்கு ஆடை வடிவமைப்பில் சங்கீதா உதவி செய்ததாக கூறப்படுகிறது.

மகன் மற்றும் மகளின் படிப்புக்காக சங்கீதா எந்த பொதுநிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாமல் இருந்தார். அவர்களின் கல்விக்காக வெளிநாட்டில் தங்கியிருந்தாக குடும்பத்திற்கு நெருக்கமானவர்கள் தரப்பில் இருந்து தகவல் வெளியாகின.
இந்த நிலையில்தான் அவர் விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மேலும் அந்த மனுவில், நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்ததாகவும், அதை கண்டுபிடித்த பிறகு தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்தேன் என்று குறிப்பிட்டுள்ளது சினிமா வட்டாரத்திலும், அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அண்மையில் கூட தமிழகத்தை சேர்ந்த பிரபல கட்சியின் தலைவர் விஜய் மற்றும் நடிகையின் பெயரை குறிப்பிட்டு பேசியிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த சூழலில் சங்கீதா தனது விவாகரத்து மனுவில், நடிகையுடன் விஜய் உறவவில் இருந்ததாக குறிப்பிட்டுள்ளது உண்மையை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.

