ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கர்நாடகாவை சேர்ந்த டிரெண்டிங் நடிகை ராஷ்மிகாவும் திருமணம் செய்து கொண்டனர். படத்தில் நடித்த போது ஏற்பட்ட காதல், திருமணம் வரை கைகூடியுள்ளது. திருமணத்திற்கு டோலிவுட், பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்து கூறிய நிலையில், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.

“விரோஷ்” என்று அழைக்கப்படும் இந்த ஜோடி தங்களது திருமணத்தை வெறும் ஆடம்பர நிகழ்வாக மட்டும் பார்க்காமல் தங்களது கலாச்சார வேர்களுக்கு மதிப்பளிக்கும் ஒரு உன்னத நிகழ்வாக மாற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதற்காக அவர்கள் இரண்டு வெவ்வேறு பாரம்பரியங்களின் படி திருமணம் செய்து கொள்ளும் முடிவை எடுத்தனர். திருமணத்தின் முதல் பகுதி காலையில் விஜய் தேவரகொண்டாவின் தெலுங்கு பாரம்பரிய முறைப்படி நடைபெற்றது.

மேலும், மாலை 4 மணிக்கு மேல் ராஷ்மிகாவின் பூர்வீகமான கர்நாடகாவின் குடகு மாவட்டத்தை பிரதிபலிக்கும் கொடவா பாரம்பரிய படி திருமணம் மீண்டும் நடைபெற்றது. மேலும், கோலாகலமாக நடந்து முடிந்த ராஷ்மிகா – விஜய் தேவரகொண்டாவின் காதல் திருமணம் செய்து கொண்ட போட்டோஸ் இணையதளத்தில் வெளியாகி செம வைரலானது.
இந்த நிலையில், திருமணத்திற்கு பின் ராஷ்மிகா மந்தனா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் முதல் முறையாக ஜோடியாக தலைகாட்டியுள்ளனர். இருவரும் உதயப்பூர் விமான நிலையத்திற்கு ஜோடியாக வந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் காரில் இருந்து இறங்கி வந்த ஜோடியாக கைக்கு கோர்த்து தங்களது ரசிகர்களுக்கு கொடுத்துவிட்டு இருவரும் சென்றனர்.
Virosh for the first time after marriage 🥂🤍🧿#Virosh #VijayDeverakonda #RashmikaMandanna pic.twitter.com/HgUgyvB5cV
— Pavan Kumar (@pavankumar__123) February 27, 2026

