வெள்ளித் திரையில் தனது சிரிப்பால் மயக்கும் நடிகை சினேகா புன்னகை அரசி என மக்களால் கொண்டாடப்படுகிறார். சினிமாவில் உச்சத்தில் இருக்கும் போது பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். குழந்தைகள் கொஞ்சம் வளர மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கினார் நடிகை சினேகா. அதே சமயம், படங்களில் நடிப்பதை தாண்டி சின்னத்திரை நடன நிகழ்ச்சியில் நடுவராக இருந்து வருகிறார்.

சினேகாலயா சில்க்ஸ் என்ற துணிக்கடையை ஆரம்பித்து அதிலும், கல்லா கட்டி வருகிறார். விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், நான் சினிமாவுக்கு வந்த பிறகு மூன்று வருடங்களில் மிகப்பெரிய விபத்தில் சிக்கினேன். அந்த விபத்தில், கை, கால், முதுகு என அனைத்து இடங்களிலும் அடிபட்டு விட்டது.

நான் எழுந்து நடக்கவே எட்டு மாதங்களாகும் என்று சொன்னார்கள். அந்த நேரம் கரு பழனியப்பன் பார்த்திபன் கனவு பட கதையை கூறினார். நான் நடக்கவே முடியாமல் இருக்கிறேன். எந்த நம்பிக்கையில் கதை கூறுகிறீர்கள் என்று அவரிடம் கேட்டேன். உடனே அதெல்லாம் இன்னும் ஒரு மாதத்தில் நடந்திடுவீங்க என்று நம்பிக்கை ஊட்டினார். அவர் கொடுத்த தைரியம்தான் அன்று என்னை நடக்க வைத்தது என சினேகா தெரிவித்துள்ளார்.

