ஆண் பாவம் பொல்லாதது படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது எல்லோரும் அறிந்ததுதான். இந்த படத்திற்கு கதை எழுதிய சிவக்குமார் முருகேசன், இயக்கியுள்ள படம் தான் தாய் கிழவி.
சிவகார்த்திகேயன் தயாரித்திருந்த இந்த படத்தின் டிரெய்லர், முன்னோட்ட காட்சிகள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. குறிப்பாக ராதிகாவின் மிரட்டலான நடிப்பு எல்லோரையும் கவர்ந்தது.

இந்நிலையில், மக்களுடன் மக்களாக படத்தை பார்த்த சிவகார்த்திகேயன் செய்தியாளர்களை சந்தித்த பொழுது செய்தியாளர் ஒருவர் ஒவ்வொரு வெளியிட்டிலும் எனக்கு இடையூறு செய்கிறார்கள் என்று சொல்கிறீர்களே, உங்களுக்கு இடையூறு செய்வது யார் என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த சிவகார்த்திகேயன் நான் அதை சொல்வதால் பல youtube சேனல்களுக்கு வியூஸ் அதிகரிக்கும். நான் இப்படி சொல்வதற்கு காரணம் ஒருவரை குறை சொல்ல வேண்டும் என்பதற்காக இல்லை.

எவ்வளவு பெரிய தடைகளையும் தாண்டி வருகிறோம் என்று அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காகவே சொல்கிறேன். தொடர்ந்து, இதே போல கேள்வி வருவதால் இனி அப்படி சொல்வதை தவிர்த்து விடுகிறேன். ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் ஒவ்வொருவரும் பல விஷயங்களை கடந்து வந்திருப்போம். நான் இந்த இடத்தில் நிற்பதற்கு காரணம் ரசிகர்களாகிய நீங்கள் தான்.
உங்களால்தான் பல தடைகளை தாண்டி இந்த இடத்தில் வந்திருக்கிறேன் என்றும், அவர்களுக்கு சொல்வதற்காக தான் நான் அதை சொல்கிறேனே தவிர மற்றவர்களை குறை சொல்வதற்காக நான் அதை சொல்லவில்லை என்று சிவகார்த்திகேயன் அந்த பேட்டியில் புலம்பி தள்ளி இருக்கிறார்.

முன்னதாக, சுமார் 180 கோடி ரூபாய் சம்பளமாக கேட்கும் அஜித்குமாரை எல்லாம் வைத்து சிவகார்த்திகேயனால், எப்படி படம் பண்ண முடியும் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், பத்திரிக்கையாளர் அது குறித்து கேள்வி எழுப்பிய நிலையில் என்னோட கம்பெனி ரொம்ப சின்ன கம்பெனி அந்த அளவுக்கு வளர பல காலங்கள் எடுக்கும். அப்படி ஒரு வேலை வளர்ந்தால் அஜித் சார் என் கம்பெனியில் படம் பண்ண சமாதித்த அதற்கு வாய்ப்பிருக்கு ஆனால், இதெல்லாம் நடக்கிற காரியமா என ஜாலியாக பேசிவிட்டு சென்றார்.

