நமது சமையலறையில் பயன்படுத்தப்படும் ஒரு முக்கிய பொருள் கருவேப்பிலை இந்த கருவேப்பிலையில் பல மருத்துவ குணங்கள் இருக்கிறது. இது உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் பல வழிகளில் ஆரோக்கியத்திற்கு நன்மையை கொடுக்கிறது.
இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட கருவேப்பிலை ஆயுர்வேதம் மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் பெயர் பெற்றது. இந்த கருவேப்பிலையை உட்கொள்வதால் ரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது.

Table of Contents
எடையை குறைக்கவும் உதவுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் மற்றும் பளபளப்பான கூந்தலை பெறவும் இது உதவி புரிகிறது. கருவேப்பிலையில் கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ், வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகப்படியாக இருக்கின்றன.
இது உடலை பல நோய்களிலிருந்து பாதுகாக்கிறது. கருவேப்பிலையில் அத்தியாவசிய எண்ணைகள் வைட்டமின்கள் மினரல்கள் மற்றும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் நிறைந்ததாக இருப்பதால் நீரிழிவு மற்றும் தொற்று நோய்கள் முதல் முடி உதிர்தல் மற்றும் அஜீரணம் வரையிலான பல நோய்களுக்கு ஒரு சக்தி வாய்ந்த இயற்கை தீர்வாக அமைகிறது.

கருவேப்பிலையில் கலோரிகள் குறைவாகவும் ஊட்டச்சத்துக்கள் அதிகமாகவும் இருப்பதால், 100 கிராம் கருவேப்பிலையில் சுமார் 830 மில்லி கிராம் கால்சியம் சத்துக்கள் உள்ளது.
இது எலும்பு மற்றும் பல் ஆரோக்கியத்தை அதிகரிக்கிறது. நீரிழிவு நோயாளிகள் கண்டிப்பாக தங்கள் வழக்கமான உறவுகளில் கருவேப்பிலை சேர்ப்பது நல்லது. கருவேப்பிலை இலைகளை வெறும் வயிற்றில் சாப்பிடலாம் அல்லது மூலிகை டீ அல்லது ஜூஸில் கலந்து கூட சாப்பிடலாம்.
முடி உதிர்வு மற்றும் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை கருவேப்பிலை பராமரிக்க சிறந்தது. கருவேப்பிலையில் உள்ள பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளன. அவை முடி உதிர்தலை குறைக்கின்றன. மேலும், இளநரை பிரச்சனையிலிருந்து விடுவிக்கிறது. அவற்றின் பூஞ்சை எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா பண்புகள் பொடுகு மற்றும் உச்சந்தலை தொற்றுகளை எதிர்த்து போராடவும் உதவி புரிகிறது.

தேங்காய் எண்ணெயில் கருவேப்பிலை கலந்து அடுப்பில் வைத்து சூடாக்கி குளிர்வித்து பின் வடிகட்டி எடுத்து இந்த எண்ணெயை வாரம் தோறும் உங்கள் உச்சந்தலையில் மசாஜ் செய்து வர நல்ல பலனை பெறலாம்.
செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியம்
செரிமானம் மற்றும் குடல் ஆரோக்கியத்தை கருவேப்பிலை மேம்படுத்துகிறது. வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டலுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் கருவேப்பிலையானது செரிமான நொதிகளை தூண்டி வீக்கம் மற்றும் வாய்வு தொல்லையை குறைக்க உதவுகிறது. சில புதிய இலைகளை ஒரு துளி தேனுடன் கலந்து மென்று சாப்பிடுவது சிறந்ததாக கருதப்படுகிறது. இயற்கையான நச்சு நீக்கியாக செயல்படும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி கொழுப்பு வளர்ச்சியை மாற்றத்தை மேம்படுத்துகிறது.

எடையை பராமரிக்க
40 கருவேப்பிலை இலையை புதினா இலவங்கப்பட்டை மற்றும் எலுமிச்சை கலந்து அடுப்பில் வைத்து சூடாகவும். அதை வடிகட்டி பின்னர் அதில் தேனை சேர்த்து குடித்து வர எடையை பராமரிக்க சிறந்ததாக கருதப்படுகிறது.
ரத்த சோகையை தடுக்கிறது
கருவேப்பிலையில் இரும்பு சத்து மற்றும் போலிக் ஆசிட் உள்ளது. இவை இரண்டும் ரத்த சிவப்பு அணு உற்பத்திக்கு அவசியமானது. எனவே, இதை தினமும் குடிப்பதால் சோர்வு மற்றும் பலவீனம் போன்ற ரத்த சோகையின் அறிகுறிகளை எதிர்த்துப் போராட உதவுகிறது.
கண்களுக்கு கருவேப்பிலை
கண்களுக்கு கருவேப்பிலை நல்லது. கருவேப்பிலையில் வைட்டமின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இது விழித்திரைகளை பாதுகாக்கவும், வறண்ட கண்கள் மாலை கண் நோய் மற்றும் சிதைவு போன்ற கண் பிரச்சனைகளுக்கு பயனுள்ளதாக உள்ளது.
கருவேப்பிலை ஜூஸ்

கருவேப்பிலை ஜூஸ் குடிக்க 30 லிருந்து 40 புதிய கருவேப்பிலை சேர்த்து தண்ணீர், எலுமிச்சைச்சாறு, தேன் ஆகியவற்றின் கலந்து குடிக்கவும். இது உடலை சுத்தப்படுத்துவதற்குவும், வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது.
கூடுதல் நன்மைகளுக்கு புதினா அல்லது லவங்கப்பட்டை சேர்க்கலாம்.
நோய் எதிர்ப்பு சக்தி
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. கருவேப்பிலை நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்று நோய்களை எதிர்த்து போராட உதவுகிறது. கருவேப்பிலையில் பாக்டீரியா பூஞ்சை மற்றும் வைரஸ் தொற்றுகளை பாதுகாக்கிறது.
இதய ஆரோக்கியம்
இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கருவேப்பிலையில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் உதவுகிறது.
அறிவாற்றல் மற்றும் நரம்பியல் நன்மைகள்
கருவேப்பிலையில் உள்ள உயிரியல் ரீதியாக செயல்படும் சேர்மங்கள் ஆனது ஆக்ஸிடேட்டிவ் சேதத்தை குறைப்பதன் மூலம் மூளை செல்களை பாதுகாக்கிறது. மேலும், இது அல்சைமர் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்சனைகள் இருந்து பாதுகாக்கிறது.

சுவாச நிவாரணம்
கருவேப்பிலை தொண்டைப்புண் பிரச்சனைகளிடமிருந்து பாதுகாக்கிறது. மேலும், அவை சுவாசக் குழாயில் இருந்து சளியை அகற்றவும் எரிச்சலை தடுக்கும் உதவுகிறது.
தினமும் கருவேப்பிலை
வெறும் வயிற்றில் பச்சையாக மெல்லுங்கள். காலையில் 5 லிருந்து 10 புதிய இலைகளை மென்று சாப்பிடுங்கள்.
இது ரத்தத்தின் சர்க்கரை அளவு சீராக்கும்.
செரிமானத்தை மேம்படுத்தும்.
நச்சுக்களை நீக்க உதவும்.
கருவேப்பிலை மூலிகை டீ

கருவேப்பிலை, துளசி, இஞ்சி மற்றும் ஒரு சிட்டிகை இலவங்கப்பட்டை தூளை தண்ணீரில் கொதிக்க வைத்து குடிக்கவும். இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மேலும் செரிமான பிரச்சனை மற்றும் சோர்வு ஆகியவற்றில் போகும். கருவேப்பிலை பொடியை உணவு அல்லது மருந்துகளில் கலந்து சாப்பிடலாம்.
கருவேப்பிலை இலைகளை நன்றாக தண்ணீரில் கழுவி நிழலில் உலர்த்தி நன்றாக பொடி செய்து அரைத்து உணவுகளில் கலந்தோ அல்லது தண்ணீரில் கலந்து குடிக்கலாம்.
குறிப்பு: இந்த கட்டுரையில் சொல்லப்பட்டவை தகவல் நோக்கங்களுக்காகவே. இதன் உண்மைத் தன்மை, துல்லியம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றுக்கு UTV Prime பொறுப்பாகாது.

