உலகம் முழுவதும் வழிபடும் பெருமாள் செல்வம் மற்றும் செழிப்பு கொடுக்கக்கூடிய உலகின் பணக்கார கடவுள். பெருமாள் விஷ்ணுவின் அவதாரம் மற்றும் பிரபஞ்சத்தின் பாதுகாவலராக இருக்கும் மூர்த்திகளில் ஒருவர்.
முன்னதாக, இறைவனிடம் முறையிடும் பிரார்த்தனைகளுடன் பெருமாள் தனது பக்தர்களுக்கு வாழ்க்கையில் அமைதி, செழிப்பு மற்றும் செல்வத்தை அருள்பாளிக்கிறார்.
பக்தர்களின் துன்பங்கள் எல்லாம் இறைவனின் பாதத்தில் வைத்து வாழ்வில் தெளிவு பெற ஞானமாக சிந்தியுங்கள். இறைவன் உங்களுக்கு நல்ல வழியையும் நல்ல நம்பிக்கையும் காண்பிப்பார். விஷ்ணுவாகிய பெருமாளின் தெய்வீக அழகு ஒப்பற்றது.
வணிகர்கள், சிறு வணிகர்கள், மாணவர்கள், தொழில் முனைவோர், ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மிகவும் அதிர்ஷ்டமானவராக பெருமாள் இருக்கிறார்.

வீட்டில் உள்ள பெருமாள் சிலையை பூஜை அறையில் வைப்பது நிச்சயம் அந்த இடத்திற்கு ஐஸ்வர்யம் தருவதுடன் சுற்றிலும், நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும். இறைவனுக்கு, பூஜைகள் செய்து வழிபட்டால் வாழ்வின் செல்வ செழிப்புடன் இறைவனின் அருளும் நிச்சயம் உங்களுக்கு கிடைக்கும்.
பெருமாளை வழிபட்டால் பெயர், புகழ், ஆடம்பர வாழ்வு பெறலாம். பெருமாளுக்கு தவறாமல் பூஜை செய்து வழிபடுவது பொருளாதார ரீதியாகவும், தனிப்பட்ட ரீதியிலும் வாழ்க்கையில் உள்ள அனைத்து கஷ்டங்களையும் நீக்கும் என்று நம்பப்படுகிறது.
பெருமாளை தொடர்ந்து வழிபட திருமணம் நடக்க உள்ளவர்களும் திருமணம் தாமதமாக இருப்பவர்களுக்கும் நல்ல வாழ்க்கை துணை கிடைக்கும். வாழ்வில் நிலை பெறவும், பெருமாளை வழிபடுவது கூடுதல் சிறப்பாக அமைகிறது. தொழில் முனைவோர், தொழிலாளர்கள் மற்றும் சிறு தொழில் செய்பவர்கள் வாழ்க்கையில் பெறும் வெற்றியை பெறுவார்கள் மற்றும் செல்வம் அதிர்ஷ்டம் பெறுவார்கள்.

மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் பெறவும், மனதை ஒருமுகப்படுத்தவும் பெருமாளை வழிபடலாம் என சாஸ்திரங்கள் கூறுகிறது. பெருமாள் சிலையை தொடர்ந்து வழிபடுவது வீடு அல்லது அலுவலகத்திற்கு செல்வத்தையும் செழிப்பையும் தரும்.
பல்வேறு தோஷங்களால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷ நிவர்த்தி பெற பெருமாளை வீட்டில் வைத்து வழிபடுவது நல்ல பலனை கொடுக்கும் என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

