தென்னிந்திய சினிமாவில் சென்சேஷன் நடிகையாக இருப்பவர் ருக்மணி வசந்த். இவர் விஜய் சேதுபதி ஜோடியாகவும், சிவகார்த்திகேயன் ஜோடியாகவும் நடித்திருந்தார்.
ஆனால், அந்த படங்கள் பெரிய அளவில் அவருக்கு ரீச் கொடுக்கவில்லை. அதன் பின்னர் அவர் நடித்த காந்தாரா படம் மிகப்பெரிய ஹிட் ஆனது.
அதில், அவரது நடிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்தன. அடுத்தடுத்து, ருக்மணி வசந்த் தற்போது யாஷ் நடிப்பில் டாக்ஸிக் படம் மற்றும் ஜூனியர் என்டிஆர் உடன் ஒரு படம் எனது பிஸியாக நடித்து வருகிறார்.

காந்தாரா படத்தின் வெற்றியை தொடர்ந்து சம்பளத்தை கிடு கிடுவென உயர்த்தி விட்டாராம். அதன் காரணமாகவே தற்போது பல தயாரிப்பாளர்கள் அவரை படங்களில் கமிட் செய்ய தயங்கி வருவதாக தகவல்கள் கூறப்படுகிறது.
இதனால் இவருக்கு பட வாய்ப்புகள் தற்போது கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

