ஆந்திராவை சேர்ந்த நடிகர் விஜய் தேவரகொண்டாவும், கர்நாடகாவை சேர்ந்த டிரெண்டிங் நடிகை ராஷ்மிகாவும் இன்று திருமணம் செய்து கொண்டனர்.
படத்தில் நடித்த போது ஏற்பட்ட காதல், திருமணம் வரை கைகூடியுள்ளது. திருமணத்திற்கு டோலிவுட், பாலிவுட், கோலிவுட் பிரபலங்கள் வாழ்த்து கூறிய நிலையில், பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
முன்னதாக நடிகை ராஷ்மிகாவும், நடிகர் ரக்ஷித் ஷெட்டியும் காதலித்து நிச்சயதார்த்தம் வரை சென்றனர். ஆனால் இந்த ஜோடி ஒரு சில காரணங்களால் பிரிந்தது.
ஒரு முறை பேட்டியில் கூட, ஒரு டாக்ஸிக் உறவில் இருந்து என்னை மீட்டவர் விஜய் தேவரகொண்டாதான் என ராஷ்மிகா ஓபனாகவே கூறியிருந்தார். இதனால் தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் விஜய் – ராஷ்மிகா திருமண அழைப்பிதழ் தங்களுக்கு வந்ததா என காந்தாரா ஹீரோ ரிஷப் ஷெட்டியுடன் கேள்வி எழுப்பப்பட்டது. அவர் கேள்வி கேட்ட உடனே நன்றி என பதிலளித்து சென்றார்.

ஏன் அவருக்கு இவ்வளவு கோபம் என்று தெரியவில்லை. இருப்பினும் நடிகை ராஷ்மிகாவும், ரக்ஷித் ஷெட்டியும் இணைந்து நடித்த க்ரிக் பார்ட்டி படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கியிருந்தது கூட ஒரு காரணமாக இருக்கலாம், அந்த படத்தில் இணைந்து நடித்த போதுதான் இருவரும் காதலித்தார்கள். அது கூட இந்த கோபத்துக்கு காரணமாக இருக்கலாம் என நெட்டிசன்கள் ஒரு பக்கம் விமர்சனங்களை கொட்டி வருகின்றனர்.

