கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு பிரம்மாண்ட மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறந்து வைக்கப்பட்டது.
இது கோவை விமான நிலையம் மற்றும் பல்வேறு முக்கிய இடங்களுக்குச் செல்லும் பயணிகளுக்குப் பெரிதும் உதவுகிறது. இந்த பகுதிகளைக் கடக்க முன்பு 45 நிமிடங்கள் வரை ஆன நிலையில் தற்போது பத்து நிமிடங்களில் மேம்பாலத்தில் இந்த சாலையைக் கடக்க முடிகின்றது.
இந்த புதிய பாலத்தில் வாகனம் வைத்திருக்கக் கூடிய நபர்கள் அனைவரும் பயணித்து மகிழ்ந்து வரும் நிலையில், ஜிடி மேம்பாலத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிவேகம் காரணமாக தினமும் இங்கு விபத்துகள் நடக்கின்றன என மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, சமூக ஆர்வலர்கள் வேகத்தை கட்டுப்படுத்த ஸ்பீடு பிரேக்கர் அமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

