தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமின்றி நடிகராகவும் பிரபலமானவர் ஆர்.சுந்தர்ராஜன். அவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் வெற்றி தொடரான சிறகடிக்க ஆசையை சீரியலில் அண்ணாமலை என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
தற்போது, சுந்தர்ராஜன் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், ஒன்றாம் வகுப்பிலிருந்து பாக்யராஜும் நானும் ஒரே ஸ்கூலில் தான் படித்தோம். அவ்வளவு சின்ன வயதில் தொடங்கிய நட்பு சினிமாவில் நுழைந்தபின் பாக்யராஜ் செய்த துரோகத்தால் தற்போது வரை அவரிடம் பேசாமல் இருந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும், பாக்யராஜ் அவன் இவன் என உரிமையுடன் பேசும் அளவுக்கு இருக்கும் ஒரே நண்பர்கள் நாங்கள் தான் என்றும் கூறினார். முன்னதாக, சினிமாவில் இயக்குனர் ஆக வேண்டும் என்கிற ஆசையில் ஒன்றாகத்தான் இருவரும் சென்னைக்கு கிளம்பி வந்தோம்.
ஒரு காலகட்டத்தில் 16 வயதிலே படத்தில் பாரதிராஜாவுக்கு அசிஸ்டெண்டாக ஒருவர் வேண்டுமென கேட்டார்கள். என்னைத்தான் போக சொன்னார்கள். ஆனால், நான் பாக்கியராஜை போக சொன்னேன்.
அப்போது, அவன் நன்றாக ஆங்கிலம் பேசுவான். அதனால், தான் அவன் இயக்குனர் ஆனாலும் நானும் இயக்குனர் ஆகி விடுவேன் என நினைத்தேன். இருவரும் ஒன்றாக சேர்ந்து இயக்குனராக ஒரே படத்தை இயக்கப் போகிறோம் என்றெல்லாம் நான் நினைத்துக் கொண்டிருந்தேன். இருப்பினும் அது பற்றி வெளியே கூறியது கிடையாது.

அதன் பிறகு, ஹீரோவாக பாக்கியராஜ் நடிக்க தொடங்கிவிட்டார். புதிய வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்க தொடங்கியது. இரவோடு, இரவாக அவர் சென்று விட்டார். காலையில், எழுந்து பார்த்தால் பாக்யராஜ் உடன் இல்லை.
அதன்பின், ஒரு லெட்டர் மட்டும் வந்தது. “ஊருக்கு போ… கடையை பார்த்துக்கொள்; நான் படம் இயக்கும்போது கூப்பிடுகிறேன்” என அந்த லெட்டரில் எழுதி இருந்தார். நான் ஒரு லெட்டர் வாங்கி அதில், நன்றி என ஒரே வார்த்தை மட்டும் நடுவில் எழுதி அனுப்பிவிட்டேன்.

அவர் வாழ்க்கையில், நான் குறுக்கிடுவேன் என பாக்கியராஜ் நினைத்திருக்கலாம். ஆனால், என் வாழ்க்கையே போனது. அவனால், தான் என நான் அப்போதே நினைத்தேன். அந்த வயசில் அப்படி நினைப்பது சரிதானே.
அதன்பின் பாக்கியராஜ் மௌன கீதங்கள் படம் தியேட்டரில் பார்த்தேன். நான் ஜெயிக்கவில்லை என்றாலும், என் நண்பன் ஜெயித்து விட்டான் என அப்போது எனக்கு தோன்றியது.

அதன் பின்னர், ஒரு நாள் சென்னை மவுண்ட் ரோட்டில் நான் நடந்து சென்று கொண்டிருந்தபோது, ஒரு பென்ஸ் கார் வந்து நின்றது. அதிலிருந்து, பாக்யராஜ் டிராப் செய்கிறேன் வாய் என அழைத்தார். முடியாது எனக் கூறி மறுத்துவிட்டேன். பின்னர், தேனாம்பேட்டையிலாவது விட்டுட்டு போறேன் என்றார். நான் கையில் பெரிய கல்லு ஒன்றை எடுத்து விட்டேன்.
அதன் பின்னர், அவர் சென்று விட்டார். எந்த மவுண்ட் ரோட்டில் பசியோடு ஒன்றாக நடந்தோமோ இப்போது பென்ஸ் காரில் அவன் சென்றான். நான் பசியோடு நடந்து போனேன் என சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

