நகராட்சி நிர்வாகத்துறையில் 2,516 பணியிடங்கள் நிரப்பப்பட்டதில் பல கோடி ரூபாய் முறைகேடு நடைபெற்றதாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த ஆதாரங்களின் அடிப்படையில், அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் தெளிவான உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின்னரும், சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக இதுவரை வழக்குப்பதிவு செய்யப்படாதது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
அமைச்சர் கே.என். நேரு உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்க தாமதம் ஏற்படுவதால், அது குற்றச்சாட்டுக்குட்பட்டவர்களுக்கு சாதகமாக அமையுமா என்ற சந்தேகமும் வலுத்துள்ளது.

உயர்நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாமல் லஞ்ச ஒழிப்புத் துறை செயல்படாததால், இந்த விவகாரத்தில் மத்திய புலனாய்வு அமைப்பான Central Bureau of Investigation (CBI) விசாரணை கோர அ.தி.மு.க. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

